tamilnadu

img

ரூ.4லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்

விவசாயத் தொழிலாளர் சங்க மத்தியக்குழு வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 17 - தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்துக்கு ஒன்றிய அரசு ரூ.4லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மத்தியக் குழு வலியுறுத்தி யுள்ளது. அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்க மத்தியக் குழு கூட்டம் அகில இந்திய தலைவர் ஏ.விஜய ராகவன் தலைமையில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை திருச்சிராப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்தில், இந்துத்துவா சக்தி களால் பட்டியலின மக்கள், பழங்குடி கள் நாடு முழுவதும் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படு கிறார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நிர்க்கதியாக நிற்கின்றன. பட்டியலின மக்கள் மீதான அடக்குமுறையை அரசு நிர்வாகம் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

சாதி ஆதிக்க சக்திகளிடமும் கார்ப்பரேட்டுகளிடமும் குவிந்து கிடக்கும் நிலங்கள்

நில சீர்திருத்தச் சட்டம் நாட்டில் இருக்கும் போதும், ஏராளமான தரிசு நிலங்கள் இருந்த போதும், பட்டியல், பழங்குடியின மக்கள் குடியிருக்க கூட நிலம் இல்லாமல் இருக்கிறார்கள். இன்னமும் சாதி ஆதிக்க சக்திகளிட மும், கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் குவிந்து கிடக்கும் நிலங்களை மீட்டெடுக்க வேண்டும். ஊரக வேலை யுறுதித் திட்டத்தை முழுமையாக செயல் படுத்தவும், 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலி ரூ.600 வழங்கவும் வேண்டும். இத்திட்டத்திற்கு ரூ.4 லட்சம்  கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒன்றிய மோடி அரசாங்கம் விவ சாயிகளுக்கு கொடுப்பதாக பிரதமர் அலுவலகம் அளித்த வாக்குறுதியை காப்பாற்றாமல் விவசாயிகளுக்கான மானியத்தையும் குறைத்து வரு கிறது. இத்தகைய பின்னணியில் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவதை சட்ட மாக்கி வழங்க வேண்டும். ஒன்றிய அரசு துணையோடு, மத சிறுபான்மையினர் கடுமை யாகத் தாக்கப்படுகிறார்கள். பெண்கள் அடக்குமுறைக்கு  உள்ளாக்கப்படு கிறார்கள். அரசியல் சாசனத்தில் இருந்து மதச்சார்பின்மையை எடுத்துவிட ஒன்றிய அரசு கடுமையாக முயற்சித்து வருகிறது.  இதனை எதிர்த்தும் விவசாயத்  தொழிலாளர் சங்கம் களப்பணி ஆற்றும். மேலும்,  கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க அகில இந்திய பொதுச் செய லாளர் பி.வெங்கட், விஜு கிருஷ்ணன், அகில இந்திய இணைச் செயலாளர் டாக்டர் விக்ரம் சிங், அகில இந்திய துணைத் தலைவர்கள் ஏ.லாசர், கோமள குமாரி, அகில இந்திய விவசாயிகள் சங்க துணைத் தலை வர் டி.ரவீந்திரன், அகில இந்திய விவ சாயிகள் சங்க மாநில பொதுச் செய லாளர் சாமி நடராஜன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை, மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம், மாநிலப் பொருளாளர் அ.பழநிசாமி மற்றும் மத்தியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வரவேற்புக் குழுச் செயலாளர் எம்.ஜெயசீலன் நன்றி கூறினார்.

மார்க்சியம் வெல்லும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர்

தோழர் சங்கரய்யாவுக்கு புகழாரம்

சுதந்திரப் போராட்டத் தியாகி, தகைசால் தமிழர் தோழர் சங்கரய்யா 103ஆவது பிறந்த நாள் விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டக் குழு சார்பில் திங்களன்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க அகில இந்திய தலைவர் ஏ.விஜயராகவன் தோழர் சங்கரய்யா  உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார்.  பின்னர் அவர் பேசுகையில், “தோழர் சங்கரய்யா 103ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பது பெருமையும். மகிழ்ச்சியும் அடைகிறேன். மாணவர் அமைப்பில் செயலாற்றிய காலத்தில் இருந்து தோழர் சங்கரய்யாவுடன் நெருக்கமான தொடர்பு எனக்கு உண்டு. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக, விடுதலைப் போராட்ட காலத்தில் இருந்து முக்கியமான பங்காற்றிய தலைவர்களில் ஒருவர்.  தமிழ்நாட்டின் ஸ்தாபன தலைவர்களில் ஒருவராக இருந்தவர். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தத்துவார்த்த பிரச்சனை முன்னுக்கு வந்த போது, அதில் முக்கிய பங்காற்றிய தலைவர்களில் ஒருவர். சரியான திசைவழியில் இயக்கத்தை முன்னெடுப்பதற்கு கருத்துரையாற்றி பிரபலமாக செயல்பட்டார். 1964 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய முக்கியமான முன்னோடி களில் இவரும் ஒருவர். தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற  குழு துணைத்தலை வராகவும் செயல்பட்டவர்.  இன்றைய சூழலில் வகுப்புவாத நடவடிக்கைகள் முன்னுக்கு வந்துள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. பெரும்பான்மை ஆட்சி அமைக்க நாட்டு மக்கள் இடம் கொடுக்கவில்லை. அவர்களை கட்டுப்படுத்த மட்டுமே முடிந்தது. ஆனால் தனிமைப்படுத்த முடியவில்லை. பாஜக அரசின் நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்படுவதாக தெரியவில்லை. மக்கள் விரோத கார்ப்பரேட்டுகளுக்கான கொள்கையை தீவிரப்படுத்துகிறது.  அதை எதிர்த்த போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியுள்ளது. அனைத்து ஜனநாயக அணிகளையும் ஒருங்கிணைத்து போராட வேண்டியுள்ளது. அதற்கு ஒரு வலுவான கம்யூனிஸ்ட் இயக்கம் தேவை. கிராமப்புற உழைப்பாளி மக்களை, ஏழை விவசாயிகளை செங்கொடி அமைப்பிற்குள் திரட்டுவதன் மூலமே இடதுசாரிகள் பலம் பெற முடியும். தோழர் சங்கரய்யா வாழ்நாள் முழுவதும் அந்த பணிக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். மார்க்சியம் வெல்லும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை உடையவராக திகழ்ந்தார்” என்றார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தோழர் சங்கரய்யா உருவப்படத்திற்கு மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர்.