இடது ஜனநாயக முன்னணி அரசின் 4-ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்!
மக்கள் கடலாக மாறியது புதரிக்கண்டம் திடல்
திருவனந்தபுரம், மே 24 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசின் நான்காம் ஆண்டு நிறைவுக் (மே 23) கொண்டாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட னர். திருவனந்தபுரம் புதரிக்கண்டம் மைதானத்தில் மாலை 4 மணிக்கே நிரம்பி வழிந்தது. கொரோனா இரண்டாவது அலை, கனமழை - வெள்ளம், நிலச் சரிவு, ஒன்றிய அரசின் மிக மோசமான நிதிப் பாரபட்சம், பழிவாங்கல் நட வடிக்கைகள் என கடினமான காலங் களிலிருந்து கேரளத்தை மீட்டெ டுத்தது பினராயி விஜயன் அரசு. வளர்ச்சிக் குறியீடுகளிலும் மாநி லத்தை தொடர்ந்து முதலிடத்தில் தக்க வைத்துள்ளது. இவ்வாறு கேரளத்தை மீண்டும் உயிர்ப்பித்த இடது ஜனநாயக முன் னணி அரசாங்கத்தின் கொண்டாட் டத்தில் கேரள மக்கள் பெருந்திர ளாக கலந்து கொண்டனர். நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேரணி யாக புறப்பட்டு, மே 23 வெள்ளியன்று மாலை 4 மணிக்கு முன்பே புதரிக் கண்டம் மைதானத்தை செங்கொடி களுக்குள் மூழ்கடித்தனர். முதலமைச்சர் பினராயி விஜயன் மாலை 4.30 மணிக்கு மேம்பாலத்திலி ருந்து திறந்த ஜீப்பில், புதரிக் கண்டனம் மைதானத்திற்கு வந்தார். அமைச்சர்கள் மற்றும் பிற மக் கள் பிரதிநிதிகள் பின்தொடர்ந்த னர். சாலையின் இருபுறமும் நின்ற வர்கள் வாழ்த்து முழக்கங்களுடன் முதல்வர் பினராயி விஜயனை வர வேற்றனர். பினராயி விஜயன் தலைமையி லான எல்.டி.எப் அரசாங்கம் தனது இரண்டாவது ஐந்தாவது ஆண்டில் பீடுநடை போடுவதால், அதை ஆத ரிக்கும் உறுதியான தீர்மானத்துடன் மக்கள் தொலை தூரங்களிலிருந்து வாகனங்களில் வந்தனர். கூட்டம் 5 மணிக்கு தொடங்கியபோது, ஏராள மான மக்கள் மைதானத்திற்குள் நுழைய முடியவில்லை. வெளியே நிறுவப்பட்ட ஒலிபெருக்கியில் இருந்து முதல்வரின் உரையை பொதுமக்கள் கேட்டனர். ஒன்றிய அரசு நிதி வழங்காமல் கேரளத்தின் கழுத்தை நெரித்தபோதி லும் திட்டங்கள் நிறைவடைந்துள் ளன, நிதி நெருக்கடி இருந்தபோதி லும் அவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்ற பாராட்டை - முன்னேற்ற அறிக்கையை (புராக்ரஸ் ரிப்போர்ட்) பினராயி விஜயன் அரசு பெற்ற நிலையில், இடது ஜனநாயக முன்னணி அரசு தொடர வேண்டும் என்று மக்கள் தங்கள் இதயத்திலி ருந்து முழக்கங்களை எழுப்பினர். சாலைகள், பாலங்கள், குடிநீர்,வீடற்றவர்களுக்கு ‘லைப்’ திட்டத்தின் மூலம் வீடுகள், ஏழைகளின் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளின் நவீன சிறப்பம்சம், தொழில்துறை, ஐடி துறைகளில் ஏற்பட்டுள்ள ஏற்றம், விழிஞ்ஞம் துறைமுகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை போன்ற அனைத்தையும் நிறைவேற்றியது குறித்து முதல்வர் ஆற்றிய உரையை மக்கள் கவனமாகக் கேட்டனர், இடையிடையே அரங்கம் அதிர கரவொலி எழுந்தது. 2016 முதல், இடது ஜனநாயக முன்னணி அரசு நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டாக்களை வழங்கியுள்ளது. முன்னர் அறி வித்தபடி, நவம்பர் 1, 2025 அன்று கேரளா தீவிர வறுமையை ஒழித்துவிட்டதாக அறிவிக்க முடியும் என்று எல்.டி.எப் அரசாங்கத்தின் சாதனைகளை பட்டியலிட்ட பினராயி விஜயன், ‘நவகேரளம்’ என்ற கருத்தின் உள்ளடக்கம், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டது என்றார். ‘கேரளம் கடன் வலையில் சிக்கியுள்ளது’ என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கும் பதிலளித்த முதல்வர் பினராயி விஜயன், ‘அது ஆதாரமற்றது’ என்று கூறினார். மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில், மாநி லத்தின் கடன், 2021-22 ஆம் ஆண்டில் 38 சதவிகிதத்திலிருந்து 34 சதவிகிதமாகக் குறைந்துள்ளது, அது மேலும் குறையும் என்று கூறினார். கேரளம் ஒரு புதிய வளர்ச்சிப் பாடத்தை எழுதியுள்ளது. புதிய கேரளத்தைப் படைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதைக் குறைத்து மதிப்பிடவும் பலவீனப்படுத்தவும் வலதுசாரி குழுக்களும் ஊடகங்களும் முயற்சிக்கின்றன. ஆனால், நாடறிந்த அரசின் செயல்பாடுகளை அவர்களால் கண்டுகொள்ளா மல் கடந்து செல்ல முடியாது என்று கூட்டம் பறைசாற்றியது. விழாவிற்கு வருவாய்த்துறை அமைச்சர் கே. ராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர் கள், சிபிஎம் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன், மேயர் ஆர்யா ராஜேந்திரன், தலை மைச் செயலாளர் ஏ. ஜெயதிலக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.