சென்னை, மார்ச் 27 - பாஜக தலைவரின் அநாகரிக அரசியல் அருவெறுக்கத்தக்கது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுருக்கம் வருமாறு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் உயர் அதிகாரிக ளுடன் அரசு முறைப் பயணமாக பயணமாக துபாய் சென்றுள்ளார். துபாயில் நடைபெறும் எக்ஸ்போ-2022 பங்கேற்றுள்ளார். ஐக்கிய அமீரக அரபு நாடுகளில் உள்ள பெரும் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து, தொழில்களில் முதலீடு செய்ய அழைக்கிறார். முதலமைச்சரின் பயணம் வெளிப்படையானது. தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு பாஜக மாநிலத் தலைவர் “ரூ.5000 மர்மப் பயணம்”, “முதலமைச்சர் துபாய் பயண மர்மம்” என்றெல்லாம் அடிப்படையில்லாத, ஆதா ரமற்ற புகார்களை பொதுவெளியில் பேசி வருவது அரு வெறுப்புத் தரும் அநாகரிக அரசியலாகும். இதுபோன்ற மலிவான செயலில் ஈடுபடுவதை பாஜக தலைவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். முதலமைச்சரின் அரசு முறை பயணத்தை கொச்சைப்படுத்தும் அண்ணா மலையின் இழி செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக் கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.