திருநெல்வேலி, நவ. 1- நெல்லை மாவட்டத்தில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களை, சாதி ஆதிக்க வெறியர்கள் சிறுநீர் கழித்தும், ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தியும் கொடூரத் தாக்கு தல் நடத்தியுள்ளனர். மணிமூர்த்தீஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (21). இவரது நண்பர் மாரியப்பன் (19). இவர்கள் திங்கட்கிழமை மாலை 7 மணியளவில் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தன ராம். அப்போது அவர்களை சிலர் வழி மறித்து ரூ.5,000, செல்போன், பைக் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டது டன், அவர்களிடம் நீங்கள் என்ன சாதி என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் நாங்கள் தேவேந்திரர் குல சமுதாயம் என கூறியுள்ளனர். இதனைக் கேட்ட அந்த நபர்கள் மனோஜ் குமார் மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். விடிய விடிய அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும் வெறிகொண்டு அந்த இரண்டு பேர் மீதும் சிறுநீர் கழித்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர். அதோடு அவர்கள் உடுத்தியிருந்த உடையைக் களைந்து நிர்வாணமாக அனுப்பி உள்ளனர்.
இச்சம்பவத்தில் தாழையூத்தைச் சேர்ந்த பொன்மணி (25), திருமலைக் கொழுந்துபுரம் நல்லமுத்து (21), ஆயி ரம் (19), ராமர் (22), சிவா (22), லெட்சு மணன் (20) ஆகியோரை போலீசார் கைது செய்து தற்போது சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மனோஜ் குமார் மற்றும் மாரியப்பனை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டச் செய லாளர் க.ஸ்ரீராம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர் மதுபால், மாவட்டச் செயலாளர் சுடலைராஜ், மாவட்டப் பொருளாளர் வழக்கறிஞர் பழனி, லெனின் கென்னடி, கணேசன் பாண்டியன் (தமிழர் உரிமை மீட்பு களம்) தமிழரசு(தமிழ் புலிகள்), கலைக்கண்ணன்(ஆதித்தமிழர் பேர வை), உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.