தஞ்சாவூர், மார்ச் 20 - தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவ மனையில் முதல் முறையாக குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையின்றி நவீன முறையில் இதய சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றார் மருத்துவக் கல்லூரி முதல்வரும், மருத்துவக் கல்வி இயக்குநருமான ஆர்.பாலாஜிநாதன். இதுகுறித்து செய்தியா ளர்களிடம் அவர் செவ் வாய்க்கிழமை தெரிவித்த தாவது: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் 2015 ஆம் ஆண்டிலி ருந்து இதுவரை பிறவியி லேயே ஏற்பட்ட இதயக் கோளாறுக்கான அறுவை சிகிச்சை 635 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவையெல்லாம் இதய அறுவை சிகிச்சையாக செய்யப்பட்டது. தற்போது பிறவியி லேயே ஏற்பட்ட இதயக் கோளாறுக்காக, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக அறுவை சிகிச்சை இல்லாமலேயே இதய உட்செலுத்தி சிகிச்சை முறை (கேத்லேப்) 2 வயது, 4 வயது, 7 வயது என 3 குழந் தைகளுக்கு செய்யப் பட்டுள்ளது. இந்த இதய உட் செலுத்தி சிகிச்சை முறை யில் 10 முதல் 15 நிமிடங்க ளில் அடைப்பு இல்லாத பகுதியில் மூடப்பட்டுள் ளது. இது போன்ற சிகிச்சை தனியார் மருத்துவமனை களிலும், சென்னையி லும்தான் செய்யப்படுகிறது. இதற்கு ரூ.2.50 லட்சம் செலவாகும். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுகாதாரப் பணிகள் துறை மூலம் நடத்தப்பட்ட இதய குறைபாடு உள்ளோ ருக்கான முகாமில், இந்த 3 குழந்தைகளும் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இதன் மூலம், இந்த 3 குழந்தை களுக்கும் இதய உட் செலுத்தி சிகிச்சை இலவச மாக செய்யப்பட்டு, 3 நாள்களில் நலமாகி வீடு திரும்பினர். இதற்காக இதய சிகிச்சைத் துறைத் தலைவர் ஜெய்சங்கர், மயக்கவியல் துறைத் தலைவர் சாந்தி பால்ராஜ், சுகாதாரப் பணி கள் துணை இயக்குநர் கலைவாணி ஆகியோரை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை பிரிவு மாநிலத் திட்ட மேலா ளர் எஸ். மருதுதுரை, மருத்துவக் கண்காணிப் பாளர் சி.ராமசாமி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.