மூலதனச் செலவுகள் 40.5 சதவீதம் என கூர்மையான வீழ்ச்சி. இதன் பொருள் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகாது. அதுவும் வேலையின்மை உச்சத்தில் இருக்கும் பொழுது! விவசாய மற்றும் நுகர்வு செலவுகளை நசுக்குவது உணவு மற்றும் நலதிட்டங்களின் மானியங்களை கடுமையாகப் பாதிக்கும். ஏழைகள் துன்பத்தில் உழல்வார்கள்.
மார்ச் தொடங்கி விட்டது. தேர்தல் பத்திரங்க ளின் விவரங்களை வெளியிட கவுண்ட் டவுன் 12 நாட்கள்தான்! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப் படி ஸ்டேட் வங்கி ஒவ்வொரு கட்சியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நிதியை மார்ச் 6 -க்குள் வெளியிட வேண்டும். தேர்தல் ஆணையம் 13ஆம் தேதி தனது இணையத்தில் வெளியிட வேண்டும்.