tamilnadu

img

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

எல்ஐசி பங்கு விற்பனைக்கு எதிராக அன்மையில் வட சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 16 மையங்களில், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்  நடைபெற்றது. பாரிமுனை பாம்பே மியூச்சுவல் கட்டிட வளாகம் முன்பு சங்கத்தின் தலைவர் கு.மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஊழியர்களும், முகவர்களும் கலந்து கொண்டு பங்கு விற்பனைக்கு எதிராக முழக்கமிட்டனர்.