மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருப்பூர், நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் தொகுதியில் மீண்டும் கே.சுப்பராயனும், நாகப்பட்டினம் தொகுதியில் வை.செல்வராஜூம் போட்டியிடுகின்றனர்.
கே.சுப்பராயன்
1976ஆம் ஆண்டு தனது 20வது வயதில் (10.8.1947) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். திருப்பூரில் கட்சியின் முழு நேர ஊழியராக செயல்பட்டு வருகிறார். பனியன் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கத்தில் ஏஐடியூசி-யின் பல தொழிற்சங்கங்களுக்கும் பொறுப்பு வகித்தவர். கட்சியின் மாநில துணைச் செயலாளராகவும், ஏஐடியூசியின் மாநிலத் தலைவர் மற்றும் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். எம்எல்ஏ-எம்பியாக வெற்றி! 1985, 1996 ஆம் ஆண்டுகளில் ஒன்றுபட்டு திருப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், 2004 ஆம் ஆண்டு கோவையிலிருந்தும், 2019ஆம் ஆண்டு திருப்பூர் தொகுதியிலிருந்தும் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
வை.செல்வராஜ்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், சவளக்காரன் ஊராட்சி கீழநாலாநல்லூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் வை.செல்வராஜ் (62). முதுகலை ஆராய்ச்சி பட்டம் வரை பெற்றவர். அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்ற தலைவராக பணியாற்றிய இவர், 1980 ஆம் ஆண்டு கட்சி உறுப்பினரானார். திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டவர். தில்லியில் நடைபெற்ற பஞ்சாயத்து ராஜ் மாநாட்டில் குடியரசுத் தலைவர், பிரதமர் முன்னிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகார பகிர்வு சம்பந்தமாக உரையாற்றியவர். கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.