tamilnadu

img

நீண்ட கால மகளிர் சுய உதவிக்குழு கடன்களை ரத்து செய்க!

நீண்ட கால மகளிர் சுய உதவிக்குழு  கடன்களை ரத்து செய்க!

ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஜுன் 21-  நீண்ட கால மகளிர் சுய உதவிக்குழு கடன்களை ரத்து செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய மாநாடு சனிக்கிழமை ஆலங்குடியை அடுத்த வம்பனில் நடைபெற்றது. ஒன்றியத் துணைத் தலைவர் பி.ஷோபனா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ். பாண்டிச்செல்வி தொடக்கவுரையாற்றினார். வேலை அறிக்கையை ஒன்றியச் செயலாளர் வி.கலைச்செல்வி, வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் எம்.வெள்ளையம்மாள் ஆகியோர் முன்வைத்தனர். தோழமைச் சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.  புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாவட்டச் செயலார் பி.சுசிலா பேசினார். ஓன்றியத் தலைவராக பி.ஷோபனா, செயலாளராக வி.கலைச்செல்வி, பொருளாளராக எம்.வெள்ளையம்மாள் உள்ளிட்ட 11 பேர்கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து மாநிலச் செயலாளர் எஸ்.கே. பொன்னுத்தாய் சிறப்புரையாற்றினார். முன்னதாக கே. வெள்ளையம்மாள் வரவேற்க, கே.சாந்தி நன்றி கூறினார்.  பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி ரேசன் பொருட்கள் வழங்க வேண்டும். நீண்ட கால மகளிர் சுய உதவிக்குழு கடன்களை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.