tamilnadu

பணியிட மாறுதலை ரத்து செய்திடுக : ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

சென்னை, ஜன. 8- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்  கூட்டணி மாநில பொதுச்செய லாளர் ச.மயில் அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் 22.1.2019 முதல் 30.1.2019 வரை  நடைபெற்ற வேலை நிறுத்த போராட் டத்தில் பங்கேற்றதற்காக தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரி யர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எனக் கூறி பணியிட மாறுதல் செய்யப்பட்ட னர். அவ்வாறு மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களது பணியிட மாறுதலை ரத்து செய்து பழைய பணியிடத்தி லேயே பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும் என முதல்வரிடம் பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் வைத்த கோரி க்கையின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் 7.9.2021 அன்று அறிவிப்பை வெளி யிட்ட முதல்வர், ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படும் என அறிவித்தார். மேலும் போராட்டக் காலத்தில் பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரி யர்கள் மீண்டும் பழைய பணியிடத்தி லேயே பணியமர்த்தப்பட பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். அதனடிப்படையில் அரசாணை (நிலை) எண்:113 மனிதவள மேலாண் மைத் (கே) துறை 13.10.2021 அன்று  வெளியிடப்பட்டது.

இந்த அரசாணை யால் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பணி மாறுதல் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்தில் பணியில் சேர்வதற்கு இய லாத நிலை உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களில் 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோரின் பணியிடங்களில் ஏற்கனவே வேறு  ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. எனவே அப்பணியிடங்கள் தற்போது காலிப் பணியிடங்களாக இல்லை. இந்நிலை யில் தற்போது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  அதற்கு முன்னர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் பழைய பணியிடத்தில் பணியாற்றும் விதமாக போராட்டக் காலத்தில் வழங்கப் பட்ட அனைத்து பணியிட மாறுதல்  உத்தரவுகளையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டுகிறோம். அப்போதுதான் முதலமைச்சரின் அறிவிப்பு ஆசிரியர்களுக்கு பயன் தருவ தாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.