tamilnadu

img

கர்ப்பிணி மகளிர் பணியில் சேர முடியாதா?

புதுதில்லி, பிப்.7- கர்ப்பிணி மகளிரை பணியில் சேரத் தகுதியற்றவர்கள் எனக் கூறவில்லை என்று இந்தியன்  வங்கி அறிக்கை அளித்திருப்ப தாக பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, மக்களவையில், மூன்று மாதத்திற்கும் மேலான கர்ப்பகாலம் கொண்ட கர்ப்பிணி மகளிரை வங்கிப்பணி யில் சேர்வதற்கு, “தற்காலிகமாக தகுதியற்ற வர்கள்” என்று கருதும்படியான, பாரபட்ச முள்ள வழிகாட்டுதல்களை இந்தியன் வங்கி  வழங்கியுள்ளதாக கூறப்படும் கருத்து உண்மையா என்றும், ஆம் எனில், அதன் விப ரங்கள் என்னென்ன என்றும், பாரபட்சமான இந்த வழிகாட்டுதல்கள் சம்பந்தமாக, வங்கிக்கு எதிராக அரசு ஏதேனும் நடவடி க்கை எடுத்துள்ளதா என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கேள்வி எழுப்பியிருந்தார்.  

இதற்கு எழுத்துப்பூர்வமாக, ஒன்றிய நிதித் துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கராட் அளித்த  பதில் வருமாறு: மூன்று மாதத்திற்கும் மேலான கர்ப்பகாலம் கொண்ட கர்ப்பிணி மகளிரை வங்கிப்பணியில் சேர்வ தற்கு, “தற்காலிகமாக தகுதியற்ற வர்கள்” என்று கருதும்படியான  எந்தவொரு பாரபட்சமான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட வில்லை என இந்தியன் வங்கி தெரிவித்துள் ளது. இதுவரை “கர்ப்பம்” என்ற அடிப்படை யில் எந்தவொரு மகளிருக்கும் வேலை வாய்ப்பு மறுக்கப்படவில்லை எனவும், பாலின பாரபட்ச முறைகள் எதிலும் வங்கி ஈடுபட வில்லை எனவும் வங்கி மேலும் கூடுதலாக தெரிவித்துள்ளது. மேலும், வங்கி வேலைவாய்ப்பிற்கான வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம், பணி யாளர் நியமனப் பணிக்கான ஆணை வழங்கு கையில், மூன்று மாதத்திற்கும் மேலான கர்ப்பகாலம் கொண்ட கர்ப்பிணி மகளிரை, வேலையில் சேர்ந்திட, “தற்காலிகமாக தகுதியற்றவர்கள்” என்று கருதும்படியான எந்தவொரு அளவுகோலையும் வங்கி நிர்ணயிக்கவில்லை என்றும், இந்தியன் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.       (ந.நி.)