tamilnadu

img

நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும்

தூத்துக்குடி ,டிச. 5 நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும் என கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக கேபிள் டிவி ஆபரேட் டர்கள் பொதுநலச் சங்கத்தின் 22ஆவது மாநில பொதுக்குழு மற்றும்  மாநாடு திங்களன்று தூத்துக்குடி திருச் செந்தூர் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநில தலைவர் வீர முத்து தலைமை வகித்தார். தூத்துக் குடி தாலுகா தலைவர் செல்வராஜ் சங்க கொடியினை ஏற்றினார். தூத்துக் குடி மாவட்ட செயலாளர் கண்ணன் அஞ்சலி தீர்மானத்தை வசித்தார். மாநில துணைத் தலைவர் ராஜேந்திர பூபதி வரவேற்புரை ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் வெள்ளைச்சாமி வேலை அறிக்கையையும், மாநில பொருளாளர் கோவர்த்தனன் வரவு, செலவு கணக்கு அறிக்கையையும் தாக்கல் செய்தனர்.  டிஐசி பைபர் (TIC fiber) நிர்வாக இயக்குநர் தணிகைவேல், மன வலிமையே வெற்றி தரும் என்ற தலைப்பில் கருத்துரை ஆற்றினார்.  நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பா ளர்களாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா,  தமிழ்நாடு கேபிள் டி.வி கார்ப்பரேசன் முன்னாள் தலைவர் என்.சிவக்குமார், முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தமிழக கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் நிறுவனத் தலைவர் சகிலன் புதிய பாதையும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் பேசினார். மாநாட்டில் கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பல்லாயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் மத்திய அரசு டைரக்ட்  டு ஹோம் என்ற திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்வதை கைவிட வேண்டும். கேபிள் டி.வி தொழிலை விரிவாக்க, மேம்படுத்த தேசிய வங்கி களில் மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும், தமிழகம் முழு வதும் இல்லம் தோறும் இணையம் என்பதை செயல்படுத்த உருவாகி வரும் பைபர் ஆப்டிக்கல் வயரை பரா மரிப்பதற்கும் சிக்னல் எடுத்துச் செல்வ தற்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர் ளுக்கு அனுமதி வழங்க வேண்டும், மின்கம்பங்களில் கேபிள் ஒயர் களை மின்வாரிய ஊழியர்கள் துண்டிப் பதை தடுக்க வேண்டும். கட்டணச் சேனல்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும், கேபிள் டி.வி ஆபரேட்டர் களின் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில தலைவராக வெள்ளைச் சாமி, மாநில பொதுச் செயலாளராக ராதா கிருஷ்ணன், மாநில பொருளாள ராக கோவர்த்தனன் உள்ளிட்ட 22 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பங்கேற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் துவக்கி வைத்தார்.