tamilnadu

img

சிபிஎம் கோயம்புத்தூர் மாவட்டச் செயலாளராக சி.பத்மநாபன் தேர்வு

கோயம்புத்தூர், ஜூலை 24 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் ஞாயிறன்று கோவை மசக்காளி பாளையம் ஹர்சா மஹாலில் நடை பெற்றது.  மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தலைமையில் நடை பெற்ற இப்பேரவையில் அமைப்புக் குழுவின் ஆறு மாத கால  அறிக்கை யை கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், கோவை மாவட்ட அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாள ருமான ஜி.ராமகிருஷ்ணன் முன்வை த்தார். பேரவையில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப் பினர் என்.குணசேகரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்

புதிய மாவட்டக்குழு

இப்பேரவையில் 38 பேர் கொண்ட  மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. கட்சியின் கோவை மாவட்ட செய லாளராக சி.பத்மநாபன் தேர்வு செய்யப்பட்டார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் களாக  ஏ.ராதிகா, எஸ்.கிருஷ்ண மூர்த்தி, கே.மனோகரன், கே. அஜய் குமார், கே.எஸ்.கனகராஜ், யு. கே.சிவ ஞானம், ஆர்.கோபால், வி.தெய் வேந்திரன், வி.சுரேஷ், என்.ஆர். முருகேசன், வி.ஆர்.பழனிச்சாமி, என். ஆறுச்சாமி  ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்டக்குழுவின் சிறப்பு அழைப்பாளராக கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார்.