* நீண்ட கால மூலதன ஆதாய வரியை மீண் டும் அமலாக்குவதன் மூலமும், பத்திர பரிவர்த்தனை வரியை அதிகரிப்பதன் மூலமும் ஊக மூலதனங்கள் மீதான வரிவருவாயை அதிகரிப்பது.
* கடனைத் திருப்பிச் செலுத்தாமல் சட்ட நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக, இந்தியாவிலிருந்து ஓட்டம்பிடித்த அனைவரும் சட்டத்தின்
முன்நிறுத்தப்படுவதையும், கொள்ளையடிக்கப் பட்ட பணத்தை அவர் களி
டமிருந்து வட்டியுடன் மீட்டெடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
* பெரும் செல்வந்தர்கள் மீதான சொத்து வரியை மீண்டும் அமலாக்க வேண்டும்; பரம்பரை சொத்துக்கள் மீதான வரியை அறிமுகப்படுத்த வேண்டும்.
* கார்ப்பரேட் லாபங்கள் மீதான வரியை சட்டப்பூர்வமான விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் பயனுள்ள வரி விகிதங்கள் குறை
வாக இருக்காது. இதனால் பெருமளவிற்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
* இந்தியாவில் அடிப்படை சொத்துக்களுடன் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகளின் சர்வதேச பரிமாற்றத்திலிருந்து பெறப்படும் மூலதன ஆதாயங்களின் மீதும் வரிவிதிப்பு செய்யப்பட வேண்டும்.
* நமது நாட்டின் கூட்டாட்சி அமைப்பையும், மாநிலங்களின் உரிமைகளையும் மதித்து, வளங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள் ளும் வகையில் ஜிஎஸ்டி மாற்றியமைக்கப் பட வேண்டும்.