tamilnadu

img

திமுக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றே இடைத்தேர்தல் வெற்றி: கே.எஸ்.அழகிரி

சென்னை, மார்ச் 3- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி திமுக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல் வர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈவிகேஎஸ். இளங்கோவன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் காங்கிரஸ் வேட்பாளர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். முதல்வரின் 2 ஆண்டு கால ஆட்சி க்கு கிடைத்த நற்சான்றே இந்த இடைத்தேர்தல் வெற்றி”என்றார். பெண்கள், உழைக்கும் மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த ஆட்சியின் செயல்பாடு திருப்தி அளித்துள்ளது என்ற நற்சான்று கிடைத்துள்ளது. குடிநீர், மின்சாரம் தடை இல்லா மல் கிடைக்கிறது. பெண்கள் கட்ட ணம் இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். இவை தான் இந்த வெற்றிக்கு காரணம் என்றும் அவர் கூறினார். திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தெளிவு இருந்தது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் எந்த தெளிவும் இல்லை. சலன த்தோடு இருந்தார்கள். சில இடங்களில் மோடி படத்தை பயன்படுத்தினார்கள். சில இடங் களில் பாஜக கொடியை கூட அதிமுக பயன்படுத்தவில்லை. இவை எல்லாம் தான் இந்த வெற்றி க்கு காரணம்எனவும் அழகிரி தெரி வித்தார்.