tamilnadu

img

துணை நிறுவனங்கள் மூலம் எல்ஐசி பங்குகளை வாங்குக: லிகாய்

சென்னை, செப். 13 - எல்ஐசி பங்குகளை துணை நிறுவனங் கள் வாயிலாக வாங்க வலியுறுத்தி புதனன்று (செப்.13) சென்னையில் எல்ஐசி முகவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். எல்ஐசி-யின் பங்குகளை ஒன்றிய அரசு சந்தையில் பட்டியலிட்டுள்ளது. அந்த  பங்கு களை செகண்டரி மார்க்கெட்டில் எல்ஐசி துணை நிறுவனங்கள் வாயிலாக வாங்க வேண்டும். ஆன்லைன் முறையில் ‘பீமா சுகம் எக்சேஞ்ச்’ திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. முகவர்களுக்கான பணி பாதுகாப்பு விதியை உருவாக்க வேண்டும்,  முகவர்க ளுக்கான நல நிதி மற்றும் உண்மையான ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,  பாலிசி பிரீமியம் மற்றும் வட்டி  மீதான ஜிஎஸ்டி ரத்து செய்ய வேண்டும், எல்ஐசி பிரீமியத்துக்கு தனியாக வருமான வரி சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி சென்னை அண்ணாசாலை எல்ஐசி தென்மண்டல அலுவலகம் முன்பு அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் (லிகாய்) குவிந்தனர். போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் அனை வரையும் வள்ளுவர் கோட்டத்துக்கு அனுப்பினர். இதையடுத்து வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு அமைப்பின் தென்மண்டல தலைவர் ஏ.வி.பெல்லார்மின் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், லிகாய் அகில  இந்திய தலைவர் சுர்ஜித் குமார் போஸ், பொதுச் செயலாளர் பி.ஜி.திலிப், தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் டி.கே.வெங்க டேசன், செயலாளர் பி.என்.சுதாகரன், மாநிலத் தலைவர் பூவலிங்கம், செயலாளர் எஸ்.எ.கலாம், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் டி.செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர்.