பத்தனம்திட்டா, மார்ச் 28- மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அய்யப்பபக்தர் சென்ற பேருந்து கேரளம் மாநிலம் நிலக்கல் அருகே விபத்திற்குள்ளா னது. இந்த விபத்து செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. பேருந்தில் ஒன்பது குழந்தைகள் உட்பட 64 பேர் பயணம் செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் ஒரு பேருந்தில் சபரி மலைக்குச் சென்றனர். 64 பெரியவர்கள், ஒன்பது குழந்தைகள் பேருந்தில் பயணம் செய்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரி விக்கின்றன. இவர்கள் சபரிமலைக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். நிலக்கல் அருகே இலவுங்கல் என்ற இடத்திலிருந்து கனலா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து வளைவு ஒன்றில் எதிர்பாராத விதமாகக் கவிழ்ந்தது. இதில் பேருந்தின் ஓட்டுநர் பலத்த காயம் அடைந் தார். விபத்து நடந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறை யினர் விரைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட வர்கள் உள்ளூர் வாகனங்கள் மற்றும் ஆம்பு லன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பேருந்து ஓட்டுநர் நிலைமை கவலைக்கிட மாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சி யர் திவ்யா எஸ்.ஐயர் கூறியதாவது: விபத்தில் மீட்கப்பட்டவர்கள் உள்ளூர் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சுகாதாரத் துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் ஒருங்கிணைந்து மீட்புப் பணி யில் ஈடுபட்டனர் என்றார். காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை யளிக்க கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.கொன்னி மருத்துவக் கல்லூரியின் நிபுணர்கள் குழு பத்தனம்திட்டா பொது மருத்துவமனையில் முகாமிட்டுள்ளது.