நாகர்கோவில், டிச. 10 - அரசு பேருந்தில் பயணித்த நரிக்குற வர் குடும்பத்தினரை பாதிவழியில் இறக்கிவிட்ட ஓட்டுனர், நடத்துனர் தற்கா லிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு புறப்பட்ட பேருந்தில் சிறுவன் உட்பட 3 பேர் கொண்ட நரிக்குறவர் குடும்பத்தினர் பயணித்துள்ளனர். அந்த குடும்பத்தினரை நடத்துநர் வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து பாதி வழியில் இறக்கி விட்டுள் ்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங் ்களில் பரவியது. நடத்துனரின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்தது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்தின் நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் வெளியிட்ட அறிவிப்பில், பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட ஓட்டுநர் நெல்சன் மற்றும் நடத்துநர் ஜெய தாஸ் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப் ்பட்டுள்ளது.