tamilnadu

img

பெருமருதூரில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்

பெருமருதூரில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்

அறந்தாங்கி,  ஜூன் 11 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருமருதூர் கிரா மம் பால தண்டாயுதபாணி வைகாசி விசாகத் திரு விழாவையொட்டி, 9 ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடை பெற்றது. இந்த போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சா வூர், புதுக்கோட்டை, இராம நாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாடு கள் போட்டியில் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, நடு மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு, தேன் சிட்டு  மாடு என ஐந்து பிரிவு களாக இந்த போட்டி நடை பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் போட்டி யில் கலந்து கொண்டன. போட்டியில் வென்ற ஒவ்வொரு பிரிவுகளிலும், முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டின் உரிமை யாளர்களுக்கு ரூ.4.29 லட்சம் ரொக்கப் பரிசும்  கோப்பைகளும் வழங்கப் பட்டன. பந்தயத்தை ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். நாகுடி போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர்.