திண்டுக்கல், நவ.14- திண்டுக்கல் பாலகிருஷ்ணா புரத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. திண்டுக்கல்- திருச்சிராப்பள்ளி- சென்னை ரயில் பாதை, திண்டுக்கல்- கரூர்- பெங்க ளூரு ரயில் பாதை, திண்டுக்கல்- கோயம்புத்தூர்- பாலக்காடு ரயில் பாதைகளை இணைக்கும் மிக முக்கியமான பாலம் இது. ஜெய லலிதா முதல்வராக இருந்த போது அறிவிக்கப்பட்ட இந்தப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறு கிறது. இதன் காரணமாக திண்டுக்கல் வரும் 100-க்கும் மேற்பட்ட கிரா மங்களில் வசிக்கும் மக்கள் 20 கி.மீ தூரம் சுற்றி வருகின்றனர். எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். தொடர் மழை காரணமாக பாலகிருஷ்ணா புரத்தில் சேறு- சகதிகளை அகற்றி சாலையை சரி செய்ய வேண்டும். பாலகிருஷ்ணாபுரம், அனுமந்த நகர் இணைப்புச்சாலையை செப்ப னிட வேண்டும். கட்டி முடிக்கப்பட்டு திறக்காமல் உள்ள ரயில்வே சுரங் கப்பாதையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி பாலகிருஷ்ணாபுரத்தில் திண்டுக்கல் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.பாலபாரதி தலை மையில் திங்களன்று வாழைக் கன்று நடும் போராட்டம் நடை பெற்றது. கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச்செயலாளர் சரத்குமார், மாவட்டக்குழு உறுப்பினரகள் தா.அஜாய்கோஷ், கே.ஆர்.பாலாஜி, முகேஷ் மற்றும் ஆசைத் தம்பி, ராஜாமணி, தங்கமணி ஆகி யோர் கலந்து கொண்டனர்.