நாகர்கோவில், டிச.11- பணியிடங்களில் பெண் ஊழி யர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண் டும் என கன்னியாகுமரியில் நடந்த பிஎஸ்என்எல் உழைக்கும் பெண்கள் தேசிய மாநாடு வலியுறுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் சனியன்று (டிச.10) அகில இந்திய பிஎஸ்என்எல் உழைக்கும் பெண்கள் 2-ஆவது தேசிய மாநாடு கன்னியாகுமரியில் நடைபெற் றது. மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர். சிஐடியு தேசிய செயலாளர் ஏ.ஆர். சிந்து தலைமை வகித்து மாநாட்டை துவக்கி வைத்தார். பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.அபிமன்யு, ஒருங்கி ணைப்பாளர் இந்திரா, உதவிப் பொதுச் செயலாளர் செல்லப்பா, தில்லி பிஎஸ் என்எல் கார்ப்பரேட் அலுவலக அதிகாரி கள் அனிதா ஜோஹ்ரி, ஜெகதீஷ் பிரசாத் உள்படபலர் கலந்து கொண்டு பேசி னார்கள்.
அனைத்து அம்சங்களிலும் பாலின சமத்துவத்தை அமல் படுத்தும் வகை யிலான பாலினக்கொள்கை வகுக்கு மாறு மத்திய அரசை வலியுறுத்தப் பட்டது. பெண்கள் மற்றும் குழந்தை கள் மீதான வன்முறைத் தாக்குதல் களை நிறுத்துவதற்கு உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும்; லூதி யானா பாலியல் துன்புறுத்தல் பிரச்ச னையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; உள்புகார் குழுக்களை சுதந்திரமாகவும் பயனுள்ள வகை யிலும் செயல்படுத்துதல், புகார்களின் மீது உடனடி நடவடிக்கை, பணி யிடங்களில் பெண் ஊழி யர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, சிறப்பு மருத்துவ விடுப்பு, ஒப்பந்த பெண் தொழிலாளர்களுக்கு வேலை பாது காப்பு, குறைந்த பட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு, பணியிடங்களில் அடிப் படை வசதிகள் ஆகியவற்றை அளிக்க வேண்டும்; பிஎஸ்என்எல் புத்தாக்கம், 4 ஜி, 5 ஜி சேவை வழங்க அனு மதித்தல், ஊதிய உயர்வு உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டின் இறுதியில் அகில இந்திய அளவிலான புதிய நிர்வா கக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாநாட் டில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், பிஎஸ்என்எல் ஊழி யர்கள் சங்க நிர்வாகிகள் பா.ராஜு, பாபு ராதாகிருஷ்ணன், பழனிச்சாமி, , பெர்லின் ஆலிஸ்மேரி, சுயம்புலிங்கம், ஜார்ஜ், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.