ஈரோடு, மார்ச் 22- ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிஎஸ் என்எல் ஊழியர் சங்க அமைப்பு தினம் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் 21 ஆவது அமைப்பு தினம் பல்வேறு இடங்களில் எழுச்சியுடன் கொண்டாடப் பட்டது. அதன்ஒருபகுதியாக ஈரோடு டெலிபோன் பவன் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.தம்பிகலையான் தலைமையில் கொண்டாடப் பட்டது. இதில், மாவட்ட செயலாளர் எஸ்.பாலு சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இதில், ஓய்வூதி யர் சங்க மாநில செயலாளர் என்.குப்புசாமி, மாவட்ட செயலா ளர் பி.சின்னச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிறை வாக ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.பழனிச் சாமி நன்றி கூறினார். பெருந்துறை தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் ஆர்.மணி தலைமை வகித்தார். இதில், மாவட்ட துணை தலை வர் எஸ்.மாலதி, ஒப்பந்த ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் எம்.சையத் இத்ரீஸ் மற்றும் கிளை நிர்வாகி கள் பலர் கலந்து கொண்டனர். பவானி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் பி.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். இதில், திரளானோர் கலந்து கொண்டனர்.