tamilnadu

img

பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியர் போராட்டம்

2017 ஜனவரி முதல் வழங்க வேண்டிய 15 விழுக்காடு ஓய்வூதிய உயர்வை வழங்க வேண்டும், முடக்கப்பட்ட ஐடிஏ-வை வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள மருத்துவப்படிகளை, விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று (ஜூலை 20) நாடு முழுவதும் அகில இந்திய பிஎஸ்என்எல் - டிஓடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை மாவட்டம் சார்பில் கிரீம்ஸ் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் அன்புமணி தலைமையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.கே.நரசிம்மன், மாநிலப் பொருளாளர் நடராஜா, பிஎஸ்என்எல்இயு தமிழ்மாநிலச் செயலாளர் பி.ராஜூ, சென்னை மாவட்டச் செயலாளர் சீனிவாசன், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் டி.கோதண்டம், பொருளாளர் கே.வி.சிவக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.