tamilnadu

img

திருநங்கைகள் பற்றிய பார்வை மாற வேண்டும்: சகோதரன் அமைப்பு வேண்டுகோள்

சென்னை, ஜூன் 1- சமூகத்தில் திருநங்கைகள் மீதான பார்வை, தவறான எண்ணங்கள் முழுமை யாக மாற வேண்டும் என சகோதரன் அமைப் பின் நிறுவனர் சுனில் மேனன் வேண்டுகோள் விடுத்தார். சர்வதேச அளவில் அணிவகுப்புகள், திருவிழாக்கள் மற்றும் பிற கலாச்சார நடவடிக்கைகள் மூலம் லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இரு பாலினம், திருநங்கைகளை ஊக்குவிக்கும் நிகழ்வு ஜூன் மாதம் கொண்டாடப்படுகிறது. அதன் ஒருபகுதியாக சகோதரன் அமைப்பின் சார்பில் 14ஆவது வானவில் சுயமரியாதை இயக்கம் கொடியேற்றத்துடன் சென்னையில் புதனன்று (ஜூன் 1) நடை பெற்றது. சகோதரன் அமைப்பின் நிறுவனர் சுனில் மேனன் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர். இதுகுறித்து சுனில்மேனன் கூறுகையில், “இந்த விழாவின் நோக்கமே ஒற்றுமையை உருவாக்குவது. சமூகத்தில் உள்ள மக்கள் எங்கள் உணர்வுகளை புரிந்து கொள் வதற்காக விழிப்புணர்வு ஊர்வலம், கலை  நிகழ்ச்சிகள், கவிதை வாசித்தல், திரையிடல்,  திருநங்கைகள் குடும்பத்தினர் சந்திப்பு” என்றார். கொரோனா பொதுமுடக்கத்தின் போது பெடரல் வங்கி எங்களுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச்செல்ல இலவசமாக வாகனம் வழங்கியது.

பல்வேறு தரப்பின ரும் எங்களுக்கு உதவினர் என்பதை நெகிழ்ச்சியோடு தெரிவித்தார். திரைப்படங்களில் நகைச்சுவை என்ற  பெயரில் நாங்கள் கேவலமாக பேசப்படுகி றோம் அல்லது தவறாக சித்தரிக்கப்படு கிறோம். நாங்கள் என்ன சாதனை புரிந்திருக்கி றோம் என்று பலரும் பார்ப்பதில்லை. மாறாக  இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள்  என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது.  எனவே சமூகத்தில் எங்கள் மீதான பார்வை, தவறான எண்ணங்கள் முழுமை யாக மாற வேண்டும். சமூகத்தில் முன்பு இருந்ததை விட தற்போது எங்கள் மீதான  பார்வையில் சிறு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நிச்சயம் முழுமையாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான முயற்சி களை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் திருநங்கையர் நல வாரிய உறுப்பினர் சுதா, எல்.ராம கிருஷ்ணன் (சாத்தி அமைப்பு), ஸ்ரீஜித் சமுத்தி ரம் (கட்டியக்காரி), டெப்பில்லா (நிறங்கள் அமைப்பு), ஜெயா (சகோதரன் அமைப்பு), காவியா (தோழி அமைப்பு), ரோஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.