tamilnadu

மின்சார துண்டிப்பால் 14 ஆயிரம் கோழிகள் இறப்பு இழப்பீடு வழங்க கறிக்கோழி வளர்ச்சி விவசாயிகள் கோரிக்கை

மின்சார துண்டிப்பால் 14 ஆயிரம் கோழிகள் இறப்பு இழப்பீடு வழங்க கறிக்கோழி வளர்ச்சி விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம், மே 28 - தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயி கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் 24.05.25 அன்று விழுப்புரத்தில் நடை பெற்றது.  இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் டி.ஏழுமலை தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கே.பி.பெருமாள் விளக்கி பேசினார். மாநிலக் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கறிக்கோழி விவசாயிகளுக்கு வளர்ப்பு  கூலியை அதிகரித்து வழங்க வேண்டும். தமிழக அரசு முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும். இன்சூரன்ஸ், நலவாரியம் அமைப் பது, இலவச மின்சாரம், வங்கிகள் மூலம் கடன் வசதி, கோழி குஞ்சு இலவசமாக அரசு  வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ மருத்துவ வசதி  ஏற்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அல்லது கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போ ராட்டத்தை ஜுலை மாதத்தில் நடத்திட முடிவு செய்யப்பட்டது.      விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா  பி.திருவேங்கடபுரம் கிராமத்தில் உள்ள  கோழிப்பண்ணையில், மின்வாரிய அலு வலர்களால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட தால், அந்த பண்ணையில் உள்ள 14,000 கோழிகள் செத்து மடிந்தன. இதேபோல  காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி கிரா மத்தில் உள்ள கோழிப் பண்ணையிலும் மின்சாரத்தை துண்டித்ததால் ஏராளமான கோழிகள் இறந்துள்ளன. இப்படி தமிழ் நாட்டில் பல இடங்களில் மின்சாரத்தை துண்டிப்பதால், கறிக்கோழி வளர்ப்பு விவ சாயிகள் பெரும் துன்பத்தையும், பெரும் நட்டத் தையும் சந்திக்கின்றனர். ஆகவே, தமிழக அரசு இதில் தலையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலக் குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.