tamilnadu

img

தெற்குராஜன் வாய்க்கால் கதவணையில் உடைப்பு

சீர்காழி அக். 23 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் ஐந்தாவது முறை யாக ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ள நீர் கொள்ளிடம் அருகே பழை யாறு மீன்பிடி துறை முகத்தை ஒட்டி முகத்துவா ரம் வழியே சென்று வங்க கடலில் கலந்து வருகிறது. இந்நிலையில், கொள்ளிடம் பகுதியில் பிரதான பாசன வாய்க்காலாக இருக்கும் தெற்குராஜன் வாய்க்காலி லும் தினமும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  தெற்குராஜன் வாய்க்கா லில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருப்பதால், மகேந்திரப்பள்ளி கிராமத் தில் தெற்குராஜன் வாய்க்கா லில் இருந்து கிளை வாய்க்காலாக செல்லும் இடத்தில் கட்டப்பட்டிருந்த கதவணையில் உள்ள இரும்பு கதவு கான்கிரீட் சுவரில் விரிசல் ஏற்பட்டு உடைந்ததால், கதவு வில கிக் கொண்டது.  இதனால் தெற்குராஜன் வாய்க்காலில் இருந்து தண்ணீர் மிகுந்த வேகத்து டன் வெளியேறி விளை நிலங்களை மூழ்கடித்தது. இதில் மகேந்திரப்பள்ளி, காட்டூர், புளியந்துறை, அளக்குடி, கோரை திட்டு ஆகிய கிராமங்களில் சம்பா நேரடி விதைப்பு செய் யப்பட்டுள்ள 2000 ஏக்கர் நிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் மூழ்கி யுள்ளன.  உடைந்த கதவணையி லிருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறி அப்பகுதி முழு வதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. சம்பா நேரடி விதைப்பு செய்யப் பட்டுள்ள நெற்பயிர் ஒரு மாத பயிராக இருப்பதால், நெற்பயிர் முழுவதும் அழு கும் நிலையில் உள்ளன. இத னால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். தற்போது ராஜன் வாய்க் காலில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதால், உடைந்த கதவணையை சரி செய்ய முடியாத நிலை இருக் கிறது. ஆனாலும், உடைந்த கதவணையை சரிசெய்யும் பணியில் பொதுப் பணித் துறை ஊழியர்கள் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர்.