புதுக்கோட்டை, டிச. 3 - தலையில் குண்டுபாய்ந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி திங்களன்று மாலை உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் நாற்றாமலை அருகே கொத்தமங்கலத்து பட்டியைச் சேர்ந்த கலைச்செல்வன் - பழனியம்மாள் தம்பதியின் மகனான புகழேந்தி (11), பசுமலைப்பட்டியில் உள்ள காவல்துறை துப்பாக்கிச்சூடு பயிற்சி தளத்திலிருந்து பாய்ந்து வந்த குண்டு தாக்கி படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கந்தர்வக்கோட்டை சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை உள்ளிட்டோர் சிறுவனின் சிகிச்சை மற்றும் உடல்நிலை முன்னேற்றம் குறித்து உடனிருந்து கவனித்து வந்தனர். எனினும் சிறுவன் பரிதாபமான முறையில் உயிரிழந்தார். இது அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.