tamilnadu

உலகச் செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் தங்கள் குடிமக்களுக்கு பூஸ்டர் ஊசியைப் போடும் பணியை கியூபா அரசு முடுக்கி விட்டுள்ளது. உள்நாட்டிலேயே தடுப்பூசிகளைத் தயாரித்துள்ள கியூபா 99 விழுக்காடு மக்களுக்கு ஒரு தவணை ஊசியும், 84 விழுக்காடு மக்களுக்கு இரண்டு தவணையும் செலுத்தியிருக்கிறது. ஜனவரி 2022க்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான பூஸ்டர் ஊசிகளை உற்பத்தி செய்ய முடியும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஆக்கிரமிப்பில் சீர்குலைந்து போன ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான ரீதியான உதவிகளைச் செய்ய ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி யுள்ளார்கள். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிதி யுதவி வழங்குவதன் மூலமாக அந்நாட்டு மக்களின் அடிப்ப டைத் தேவைகளை நிறைவேற்றுவதே இந்த உதவிகளின் நோக்கமாக இருக்கப் போகிறது. உதவிகளை தலிபானை இணைத்துக் கொள்ளாமல் செய்யவும் தீர்மானம் வலியுறுத்தியிருக்கிறது.

இன்று(டிசம்பர் 24) நடைபெறவிருந்த ஜனாதிபதித் தேர்தலை தள்ளி வைப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. சில வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்த தனது நடவடிக்கை சரியானதுதான் என்று சுட்டிக்காட்டியுள்ள தேர்தல் ஆணையம், ஜனவரி 24 ஆம் தேதியன்று தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட தால் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலைத் தயார் செய்ய போதிய அவகாசம் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.