அமெ. தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதர கத்திற்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்து உள்ளனர். இதனைத் தொ டர்ந்து வெடிகுண்டு நிபு ணர்கள், தூதரகத்தில் சோதனை மேற்கொண்ட னர். அப்போது வெடி குண்டு மிரட்டல் வெறும் புரளி எனக் கண்டுபிடிக்கப் பட்டது. மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
வினாத்தாள் கசிவு: தேர்வு ரத்து
திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகவியல் பட்டப் படிப்பின், ‘Indu strial Law’ (தொழில் துறை சட்டம்) பாடத்திற் கான தேர்வு செவ்வா யன்று நடைபெற இருந்த நிலையில், அதன் வினாத் தாள் கசிந்ததால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
சென்னை: சேலத்தைச் சேர்ந்த விசா ரணை கைதி சிறையில் காவலர்களால் தாக்கப் பட்டதால் உயிரிழந்த வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காவ லர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் அபராதத் தொகையை வசூலித்து இழப்பீடு வழங்க தமிழ் நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
உயர் நீதிமன்ற கிளை அதிருப்தி
மதுரை: “லஞ்ச வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வேண்டுமென்றே தாமதப் படுத்தப்படுகிறது. இதனை நீதிமன்றம் கவனித்து வரு கிறது. நீதிமன்றத்தில் லஞ்ச வழக்கு முடிவதற்கு 10 ஆண்டுகளுக்கு மேலா கிறது” என உயர்நீதி மன்ற மதுரை கிளை அதிருப்தியையும் கண்டனத் தையும் தெரிவித்துள்ளது.