tamilnadu

img

விவசாயிகள், கூலித் தொழிலாளர் பெயரில் மோசடியாக பல நூறு கோடி ரூபாய் கடன் பெற்ற ஆரூரான் ஆலை - பி.செந்தில்குமார்

சிறப்பாக செயல்பட்டு வந்த ஆலை, நிர்வாகச் சீர்கேடுகளால்  2016- 17 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு கிரைய தொகையில் பாக்கி வைத்து விடுகிறது. 2018 இல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய முழுத்தொகையும் வழங்காமல் ஆலையை மூடி விடுகிறது. மூடிய ஆலையை திறந்திட கோரி தொடர்கிறது போராட்டம்...

முதல்வர் தலையீடு கோரி இன்று முற்றுகை

பல்வேறு வங்கி நிர்வாகங்கள், விவசாயி களுக்கு வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பிவருகின்றனர். 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கட னுக்கு ஆலை நிர்வாகம் கரும்புகிரயத்தில் பிடித்தம் செய்த தொகையை வங்கிகளுக்கு செலுத்தவில்லை எனவும் சட்டப்பூர்வமான நட வடிக்கை விவசாயிகள் மீது எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளனர். அத்துடன் விவசாயிகளுக்கு தெரியாமல் ஆலை நிர்வாகம் விவசாயிகள், வெட்டு கூலி  ஆட்கள், பணியாளர்கள் என அனைவர் பெய ரிலும் ரூ.20 லட்சம் வரை பல லட்சங்கள், ஆலை யின் ஜாமீனில் சுமார் 7 ஆயிரம் பேர் மீது ஏறத் தாழ ரூ.300 கோடி வரை கடன் பெற்றுள்ளனர். வங்கி அதிகாரிகள், ஆலை நிர்வாகத்தின் கூட்டுச்சதி, மோசடியால் விவசாயிகள் கட னாளி ஆக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து விவ சாயிகள் காவல் நிலையங்களில் புகார் அளித்த னர். மோசடி செய்த வங்கி அதிகாரிகள், ஆலை  நிர்வாகிகள், ஆலை உரிமையாளர் ஆகியோரை கைது செய்யவேண்டும் என போராட்டங்கள் நடைபெற்றன. நீண்ட போராட்டத்திற்கு பின்  வழக்குபதிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த  ஆட்சியாளர்களால் யாரும் கைது செய்யப்பட வில்லை. ஆலை நிர்வாகம் கடனுக்கு தாங்கள்  பொறுப்பேற்று செலுத்திவிடுகிறேன் என  எழுத்துப்பூர்வமாக காவல்துறையில் சமர்ப்பித்த னர்.

முதல்வரின் கவனம் அவசியம்

திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை  ஆலை முன்பு நூற்றுக்கணக்கான விவசாயி களின் தொடர் காத்திருப்பு போராட்டம் 21 ஆவது நாளாக தொடர்கிறது. தமிழக முதலமைச்சர்  இப்பிரச்சனையில் தலையிட்டால்தான் தீர்வு என விவசாயிகள் கோருகின்றனர்.1989 இல் துவங்கப்பட்ட திருமண்டங்குடி திரு ஆரூரான் சிறந்த கரும்பு விளையும் பகுதியில் உள்ளது. 

கரும்பு பண நிலுவை 

சிறப்பாக செயல்பட்டு வந்த ஆலை, நிர்வா கச் சீர்கேடுகளால் 2016- 17 ஆண்டுகளில் விவ சாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு கிரைய தொகையில் பாக்கி வைத்து விடுகிறது. 2018 இல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய முழுத்தொகையும் வழங்காமல் ஆலையை மூடி விடுகிறது. மூடிய ஆலையை திறந்திட வேண்டும். விவசாயிகளுக்கு வழங்க வேண் டிய கரும்பு நிலுவைத் தொகையை வழங்கிட  வேண்டும்.  ஆலையை அரசே ஏற்று நடத்திட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய அமைப்பு கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தின.

ஆலையின் மோசடியை மறைத்த NCLT 

வங்கி நிர்வாகங்கள் சில மற்றும் சிலர் நீதி மன்றம் சென்றதன் விளைவாக தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT-National Campany law Tribunal)  ஆலையின் சொத்துக்களை விற்று தீர்வுகாண  உத்தரவிட்டது. அந்தப் பணி யைச் செய்வதற்காக சதாசிவம் என்பவர் நிய மிக்கப்பட்டார். அவர், விவசாயிகளுக்கு வழங்க  வேண்டிய எப்ஆர்பி (FRP-ஒன்றிய  அரசின்  நியாயவிலை), எஸ்ஏபி ( SAP-மாநில அரசின்  பரிந்துரை விலை), 5 ஏ ( லாபத்தில் பங்கு)  கடந்த மூன்று ஆண்டுகளில்  விவசாயிகளுக்கு எவ்வளவு வழங்க வேண்டும் என முறையாக சரியான கணக்குகளை தெரிவிக்காமல் குறைத்  தும் மறைத்தும் காட்டப்பட்டுள்ளதாக தெரி கிறது. என்சிஎல்டி  கவனத்தில் எடுத்துக்கொள்ள வும் இல்லை. அத்துடன் விவசாயிகள் பெயரில் வங்கிகளில் ஆலை நிர்வாகம் பெற்ற சட்ட விரோத கடன் காட்டப்படாமல் மறைக்கப்பட்டுள்  ளது. மறக்கப்பட்டுள்ளது. இத்தகைய மோசடி களுக்கு மத்தியில் கால்ஸ் (KALS) நிறுவனம் (மது பானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் நிறு வனம்) ஏலத்தில் எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

சட்டமன்ற தேர்தல் முன்பு

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடை பெற்ற கூட்டங்கள், விவசாயிகள் போராட்டங்க ளில் திருஆரூரான் சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என கோரிக்கை முன்  வைக்கப்பட்டது. திமுகவின் ஏற்பாட்டில் பாப நாசத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஏறத்தாழ 720 ஏக்கர் நிலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடைய ஆலையை வெறும் ரூ.147 கோடிக்கு ஏலம்  எடுக்கப்பட் டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் நியாய விலையில் 57 சதவீதம்  மட்டும் ரூ.78 கோடியில் வெறும் ரூ.45 கோடி  மட்டும் வழங்க என்சிஎல்டி  உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய எஸ்ஏபி, 5 ஏ- பாக்கி குறித்து எதுவும் கூறப்படவில்லை. வியர்வை சிந்தி கரும்புவெட்டிய தொழிலாளி  சம்பள பாக்கி 100 ரூபாயில் ஒரு ரூபாய் போக்கு வரத்துக்கு வழங்கவும் வங்கிகளுக்கு ஆலை  நேரடியாக வாங்கிய பல கோடி கடனில்  ரூ.80 கோடி மட்டும் செலுத்தினால் போதும் என உத்த ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பெய ரில்  ஆலை வாங்கிய கடன் குறித்து ஏதும் குறிப்  பிடவில்லை.  ஒரு புறம் விவசாயிகள், வெட்டு தொழி லாளி, ஆலை தொழிலாளி, CBILL உள்ளிட்ட மிக முக்கிய பிரச்சனைக்கு எத்தகைய தீர்வும்  இல்லை என்கிற நிலை. மறுபுறம் விவசாயி களுக்கு வெட்டிய கரும்புக்கு நிலுவை தொகை முழுமையும் கிடைக்கவில்லை. வெட்டிய தொழிலாளிக்கு சிந்திய வேர்வை ,உழைப்பு வீண். மறுபுறம் அரசின் பொதுத்துறை வங்கி களின் மக்கள் பணம் கொள்ளை. அனைத்து நிலுவை பாக்கிகளையும் விவசாயிகளுக்கு வழங்கினால் 70 சதவீதம் விவசாயிகளுக்கு கூடு தலாக கிடைக்கும்.

புதிய நிர்வாகம் KALS 

ஆலையை இயக்க தனக்குள்ள அனைத்து செல்வாக்குகளையும் பயன்படுத்தி கால்ஸ் நிறு வனம் ஈடுபட்டு வருகிறது. ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகளின்  பண பலத்தை பயன்படுத்தி ஆள் பலத்தை உருவாக்கி 57 சதவீத பணத்தை  பெற்றுக் கொள்ளவும் நான்கு தவணைகளாக பெறவும் ஓராண்டில் பெற்றுக் கொள்ளவும் முறைகேடாக வழக்கறிஞர்கள் மூலம் புரோக் கர்களை பயன்படுத்தி விவசாயிகளிடம் கை யெழுத்து பெறுகின்றனர். புதிய நிர்வாகத்திடம் விவசாயிகள் மீதமுள்ள தொகைக்கு  மண்டி யிட வேண்டிய அவல நிலை ஏற்படும். கரும்பு  பதிவு கட்டாயமாக்கப்படும். பழைய ஆரூர் ஆண்ட சர்க்கரை ஆலையுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய மலையாக கால்ஸ் நிறுவனம் முன்   நிற்கிறது.

அனைத்துக் கட்சிகள் ஆதரவு

சிபிஎம், சிபிஐ, மதிமுக, காங்கிரஸ், தேமு திக, நாம் தமிழர் கட்சி,பாஜக, மூவேந்தர் முன் னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி ,அதிமுக (ஓபிஎஸ் அணி) உள்ளிட்ட கட்சிகளின் மாநில  மாவட்ட தலைவர்களும் அனைத்து விவசாயி கள் சங் கங்களுடைய முன்னணி தலைவர்களும் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இன்று முற்றுகை

அரசே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையை ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்தபோது என் சி எல் டி தீர்ப்புகளும் பல ஆயிரம் கோடி மதிப்புடைய சொத்து சிலநூறு கோடிக்கு கால்ஸ் ஏலம் எடுத்ததும் விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகை விவசாயிகள் பெயரில் கடன் சிபில் பிரச்சனைக்கு தீர்வு எதுவும் இல்லாமல் ஏறத்தாழ 7 ஆயிரம் விவசாய குடும்பங்களின் வாழ்வு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. ஜனநாயக முறையில்  இந்த ஆலை பிரச்ச னைக்கு  விவசாயிகளும் திமுகவும் போராடிய  போது எடப்பாடி அரசால் பாயாத கைது நட வடிக்கைகள், வெறும் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்வது நியாயமற்றது. எனவே தமிழக முதலமைச்சர் தலையிடா மல் இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுமா என்கிற ஐயம் விவசாயிகளிடம் எஞ்சி நிற்கிறது தமி ழக அரசும் தமிழக முதல்வரும் தலையிட வலி யுறுத்தி  டிசம்பர் 21 அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறு கிறது.