புதுச்சேரி,ஜூலை 16- புதுச்சேரி அருகே ஆளுநர் வருகை யை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கருப்பு பலூன்களை பறக்க விட்டும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். புதுச்சேரி அருகே துத்திப் பட்டு பகுதியில் தனியார் நிறுவ னத்துக்கு சொந்தமான கிரிக்கெட் மைதானம் உள்ளது. இங்கு அரசுக்கு சொந்தமான ஏரி மற்றும் நீர்நிலை களை ஆக்கிரமித்து மைதானம் கட்டி யுள்ளதாக ஏற்கெனவே பிரச்சனை எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்ற த்தில் வழக்கும் தொடரப்பட்டது. பிறகு அப்போதைய ஆளுநர் கிரண்பேடி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டி டத்தை இடித்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் அவரது உத்தரவு கிடப்பில் போடப்பட்டு விட்டது. இது குறித்து தற்போதைய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கவனத்துக்கு எடுத்து சென்ற நிலை யில், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் பிரச்சனை எழுப்பப் படும் துத்திப்பட்டு கிரிக்கெட் மைதா னத்தில் சினிமா மற்றும் தொலைக் காட்சி நட்சத்திரங்கள் பங்கேற்கும் 2 நாள் கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை (ஜூலை 16) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க ஆளுநர் தமிழிசை வருகைதர இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் ஆத்திர மடைந்த கிராம மக்கள் ஆளுநரின் வருகையை கண்டிக்கும் விதமாக தங்கள் வீடுகளின் முன்பு கருப்பு கொடி களை கட்டியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து கிராம மக்கள் கூறும் போது, ‘‘ஏரி இடங்களை ஆக்கி ரமித்து கிரிக்கெட் மைதானம் கட்டப் பட்டுள்ளது. மேலும் மைதா னத்தை சுற்றி மதில் சுவர் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் எங்களால் விவசாய நிலங்களுக்கு கூட செல்ல முடியவில்லை. இது குறித்து புகார் மனு அளிப்பதற்காக ஆளுநரிடம் நேரம் கேட்டும், அவர் ஒதுக்கி கொடுக்க வில்லை. ஏரியில் தண்ணீர் இன்றி விவ சாயம் செய்ய முடியவில்லை. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்து அறிவிப்போம்.’’என்றனர். இதையடுத்து தகவல் அறிந்து துத்திப்பட்டு கிராமத்துக்கு வந்த சேதராப்பட்டு காவல்துறையினர் கருப்பு கொடிகள், கருப்பு பலூன்கள் மற்றும் சிலிண்டரை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். இதனிடையே சின்னத்திரையினர் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியை சட்டப் பேரவைத் தலைவர் செல்வம், பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.