tamilnadu

img

சிபிஎம் பொதுக்கூட்டம் நடக்கும் இடம் வழியாக பாஜக ஊர்வலம்

சிபிஎம் பொதுக்கூட்டம் நடக்கும் இடம் வழியாக பாஜக ஊர்வலம்

காவல்துறையின் பாரபட்சத்துக்கு கண்டனம்

இராமநாதபுரம், மே 26 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக் கூட்டம் நடக்கவிருந்த நேரத்தில் அந்தப் பகுதியில் பாஜக வினரின் ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து, பரமக்குடி காவல்துறை பதற்றத்தை உருவாக்கியதற்கு கட்சி  சார்பில் கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுக்கூட்டம் திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் பரமக்குடி காந்தி  சிலையின் முன்பாக சிபிஎம் சட்டமன்ற குழு தலைவர் நாகை மாலி சிறப்புரை ஆற்ற உள்ளார் என சில நாட்களுக்கு முன்பாகவே காவல்துறையில் அனுமதி பெறப்பட்டது.  இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடை பெறும் என முன்கூட்டியே அறிவிக்கப் பட்ட அதே நேரத்தில் அந்த வழியாக பாஜக வினர் ஊர்வலமாக வந்தனர். பாஜகவினர் அத்துமீறல் இது தொடர்பாக, இந்த நேரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திறந்த வெளி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி பெற்று இருந்த நிலையில் இதன் வழியாக  பாஜக ஊர்வலம் செல்ல அனுமதிப்பது சரியில்லை என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்கள் காவல் துறை யினரிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பாஜகவினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழரிடம், மைக்கை ஆப் பண்ணுங்க என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் ஒரு சில நிமி டங்கள் பதற்ற நிலை ஏற்பட்டது. இதை கண்டு கொள்ளாமல் காவல்துறையினர் பாஜக வினரை அந்த வழியாக ஊர்வ லமாக அழைத்துச் சென்ற னர். காவல்துறையின் இந்த  செயலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் இது தொடர்பாக மாவட்ட  காவல் கண்காணிப்பாளரிடம்  புகார் அளிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உருவாகக் காரணமாக இருந்த பரமக்குடி காவல்துறையினர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.