விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் ஒன்றிய பாஜக மோடி அரசு இழைத்துவரும் துரோகத்தை கண்டித்து திங்களன்று (நவ.27) சென்னையில் இரண்டாவது நாளாக பெருந்திரள் அமர்வு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பெ.சண்முகம் பேசினார். மேடையில் அ.சவுந்தரராசன், ஜி.சுகுமாறன் (சிஐடியு), மு.சண்முகம், கி.நடராஜன் (எல்பிஎப்) உள்ளிட்டு 11 மத்திய தொழிற்சங்கங்கள், மாநில தொழிற்சங்கங்கள், சம்மேளனங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்புகளை சார்ந்த தலைவர்கள் உள்ளனர். தமிழகத்தில் இந்த போராட்டம் இன்றோடு நிறைவடைகிறது.