tamilnadu

பாஜக அமைச்சர் விஜய் ஷாவை “காணவில்லை” ம.பி., முழுவதும் நோட்டீஸ்

பாஜக அமைச்சர் விஜய் ஷாவை “காணவில்லை” ம.பி., முழுவதும் நோட்டீஸ்

பாஜக மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச அமைச்ச ருமான குன்வர் விஜய் ஷா “ஆபரேசன் சிந்தூர்” தாக்குதல் திட்டத் தில் சிறப்பாக செயல்பட்ட கர்னல் சோபி யா குரேஷியை “பாகிஸ்தானின் சகோதரி” எனக் கூறி சர்ச்சையை ஏற்ப டுத்தினார். மத்தியப் பிரதேச மாநில நீதிமன்ற உத்தரவுக்குப் பின் விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் மே 19 அன்று உச்ச நீதிமன்றம் அருவருக்கத்தக்க பேச்சு என விஜய் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற கண்ட னத்திற்குப் பின் விஜய் ஷா தலைமறை வாகிவிட்டார். கடந்த ஒரு வாரகாலமாக அவர் அரசு தொடர்பான பணிகளிலும், கூட்டங்களிலும் இல்லை. இதனால் இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கி ரஸ் பிரிவு மாநிலம் முழுவதும் “காணா மல் போனவரைத் தேடுதல்” என்ற தலைப்பில், காணாமல் போன பழங்குடி யினர் நல அமைச்சர் விஜய் ஷா பற்றி தகவல் அளிப்போருக்கு  ரூ.11,000 பரிசு வழங்கப்படும் என நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளது.