திருப்பூர், மார்ச் 30 – திருப்பூர் அருகே கடன் வாங்கி யவர்களிடம் ஆவணங்களைப் பெற்று ரூ.5.75 கோடி சொத்துக்களை பாஜக மாவட்டச் செயலாளர் ராஜா அபகரித்து விட்டதைக் கண்டித்து பாதிக்கப் பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதனன்று மாலை ஒரு பெண் உள்பட மூவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடி யாக அவர்களை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தாராபுரத்தைச் சேர்ந்த சிவபாலமுருகன் மற்றும் அவரது மனைவி சித்ரா மற்றும் தாராபுரம் ஆச்சியூரை சேர்ந்த மாற்றுத் திறனாளி மாசிலாமணி ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சிவபால முருகன் மற்றும் சித்ரா தம்பதியினர் போலீசாரிடம் கூறுகையில், “வீடு கட்டுவதற்கும், குழந்தைகளின் படிப்புச் செலவிற்கும் திருப்பூர் பாஜக தெற்கு மாவட்டச் செயலாளர் ராஜா என்பவரிடம் ரூ.24 லட்சம் பணம் வாங்கினோம். இதற்கு லட்சக் கணக்கில் ராஜா வட்டி கேட்டார்.
இதனைக் கட்ட முடியவில்லை. பணத்தைக் கட்ட வங்கியில் கடன் வாங்கி தருவதாகக் கூறி எங்களுக்கு சொந்தமாக, பழனியில் உள்ள 2 ஏக்கர் நிலத்தின் ஆவணங்களை அவர் வாங்கிக் கொண்டார். வங்கியில் கடன் வாங்கித் தராமல் ரூ.5 கோடி மதிப்பி லான அந்த நிலத்தை அவர் அப கரித்துக் கொண்டார். இதுகுறித்து கேட்டதற்கு தரக்குறைவாக பேசி ராஜா மிரட்டுவதாக” தெரிவித்தனர். அதே போல் மாற்றுத்திறனாளி மாசிலாமணி தெரிவிக்கையில், “எனது தாயாரின் மருத்துவச் செலவிற்காக ரூ.5 லட்சம் ராஜாவிடம் வாங்கி யிருந்த நிலையில் அவர், வட்டிக்கு மேல் வட்டி கேட்டு தொந்தரவு செய்தார். ஆச்சியூரில் எனக்கு சொந்த மான ரூ.75 லட்சம் மதிப்பிலான வீட்டு ஆவணங்களை கடன் வாங்கி தருவதாக கூறியதால் நம்பி கொடுத்தேன், ஆனால் ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி, வீட்டை அபகரித்துவிட்டார்” என்று கூறினார். எனவே தங்கள் சொத்தை மீட்டுத் தரவும், பாஜக பிரமுகர் ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண் ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.