ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உறுதி
விதிகளுக்கு புறம்பான கல்லூரி
பேச்சுலர் ஆப் எலெக்ட்ரோ ஹோமியோபதி அண்ட் சர்ஜரி என்ற பிரிவை துவங்குவதற்கு ஒன்றிய அரசின் அனு மதியை மட்டும் பெற்றுக் கொண்டு பாடத்தை நடத்தி வருகின்ற னர். இப்பிரிவை துவங்க தில்லி மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டுமே மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. பிற மாநில அரசுகள் இன்னும் முறையாக அனுமதி வழங்கவில்லை. இதனால், மாநில அரசுகள் இந்தக் கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயிக்கவோ, கல்லூரிகளை கண்காணிப்ப தற்கோ எவ்வித விதிமுறைகளும் உருவாக்கவில்லை. இதன் கார ணமாக, அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக, தனியார் குடோன்களி லும், வீடுகளிலும் இந்த பிரிவு நடத்தப்பட்டு வருகிறது. இக்கல்லூரி யில் ஆய்வகங்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் ஏது மின்றி பாடத்தை நடத்தி வருகின்றனர். மேலும், அக்கல்லூரி நிர்வா கத்தினரே கட்டணத்தை முடிவு செய்கின்றனர். மாணவிகளின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்கின்ற னர். எனவே, தமிழக அரசு, உடனடியாக இக்கல்லூரிகளை உயர் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து தொடர் கண்காணிப்பு செய்திட வேண்டும். இக்கல்லூரிகள் அரசு விதிமுறைகளை பின்பற்றுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
விருதுநகர், ஜூன் 13- அருப்புக்கோட்டையில் சர்ச் சைக்குரிய தனியார் நர்சிங் கல்லூரி யில் படித்த மாணவ, மாணவிகள் இந்திய மாணவர் சங்கத்தின் தலை மையில் மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாதரெட்டியுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் அருப் புக்கோட்டை தெற்குத் தெருவில் தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி உள்ளது. இதில் எலெக்ட்ரோ ஹோமியோபதி மற்றும் சர்ஜரி என்ற பிரிவில் பாடங் கள் நடத்தப்பட்டன. இந்தநிலை யில், இக்கல்லூரியின் தாளாளரான பாஜக சிறுபான்மை பிரிவு முன் னாள் மாவட்டத் தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ், அங்கு படிக்கும் 2-ஆம் ஆண்டு மாணவி ஒருவ ருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும், கைப் பேசி மூலம் ஆபாச படங்களை யும் அனுப்பியுள்ளார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி, சக மாண வர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு, காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மாணவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, பாஜக நிர்வாகி தாஸ்வின் ஜான் கிரேஸ் கைது செய்யப்பட்டார். அவரை 15 நாள் சிறையில் அடைக்க திருவில்லிபுத் தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மாணவ, மாண விகள் தங்களது படிப்பை வேறு கல்லூரியில் தொடர்ந்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட அனைத்து மாணவ, மாணவிகளும் இந்திய மாணவர் சங்கம் தலைமை யில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்கு வந்தனர். அனைவரையும் கூட்ட அரங்கிற்குள் ஆட்சியர் ஜெ. மேகநாதரெட்டி வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மாணவர் சங்க மாநி லச் செயலாளர் வீ.மாரியப்பன் கூறி யதாவது: இந்தக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத காரணத் தால் கடந்த 2017-ல் சீல் வைக்கப் பட்டது. தற்போதும் இந்தக் கல்லூரி இயக்கப்பட்டு வருகிறது. பாஜக வில் பதவியில் இருப்பதால் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத ஒரு குடோன் போல் உள்ள இடத்தில் தாஸ்வின் ஜான் கிரேஸ் கல்லூரி யை நடத்தி வந்துள்ளார்.
மேலும், விடுதியானது, மாண வர்கள் தங்குவதற்கு உகந்ததாக இல்லை. கல்லூரியும், விடுதியும் வாடகைக் கட்டிடத்தில் தான் இயங்குகின்றன. விருதுநகர் மாவட்ட சமூகநலத்துறையும், வரு வாய்த்துறையும் அனுமதி வழங் கிய பின்பு தான் விடுதி துவங்க முடி யும். ஆனால், விடுதியின் முதல்வர் பாஜக நிர்வாகி என்ற ஒரே கார ணத்தால் இந்த அனுமதி வழங்கப் பட்டுள்ளது. எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என நிர்ணய மும் செய்யப்படவில்லை. எனவே, மாணவ, மாணவிகளிடம் அள வுக்கு அதிகமாக ரூ.1 லட்சம் வரை கட்டண வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவி ஒரு வரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி யும் வந்துள்ளார். சக மாணவர்கள், இதுபோல் பிற மாணவிகளுக்கும் இந்த நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காக தொடர்ந்து இரு நாட்க ளாக போராட்டம் நடத்தி வருகின்ற னர். எனவே, ஒரு மாணவ, மாணவி கூட பாதிக்காதபடி மாவட்ட ஆட்சி யர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், ஒரு வாரத்திற்குள் அனைத்து மாணவர்களும் தங்களது கல்வியைத் தொடர்ந்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், இதில், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சமயன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பூங் கோதை, மாதர் சங்க மாநிலச் செய லாளர் எஸ்.லட்சுமி, மாவட்டத் தலைவர் என்.உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.