tamilnadu

img

ராஜஸ்தானை மதவெறிக் களமாக்க முயலும் பாஜக

ராஜஸ்தானை மதவெறிக் களமாக்க முயலும் பாஜக

சிபிஎம் மாநிலச் செயலாளர் கிஷன் பாரிக் குற்றச்சாட்டு

ராஜஸ்தானில் முன்னெப் போதும் இல்லாத வகை யில் ‘இஸ்லாமிய வெறுப் பை’ பாஜக மற்றும் சங்-பரிவார் கூட்டம் உருவாக்கியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கிஷன் பரிக் கூறினார்.  மதுரையில் நடைபெற்ற கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது:- “ராஜஸ்தானில் மத நல்லிணக்கச் சூழல் நிலவியது. ஆனால், மக்கள வைத் தேர்தலுக்குப் பின்னர் நிலைமை தலைகீழாக மாறி வருகிறது. பாஜக - சங்பரிவார் கூட்டத்தின் நடவடிக்கைகள் ரம்ஜான் காலத்தில் நிரூபணமானது.  ரம்ஜான் அன்று பாஜக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மசூதிக்கு வெளியே காத்திருந்து முஸ்லிம்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது வழக்கம். ஆனால், இந்தாண்டு சங்-பரிவார் தலைமை ரம்ஜானுக்கு வாழ்த்துத் தெரி விக்க தடை விதித்தது. எதிர்பாராத விதமாக முதல்வர் பொறுப்பிலுள்ள பஜன்லால் சர்மா, வெறுப்புப் பிரச்சார அரசியலில் கவனம் செலுத்துகிறார். இருப்பினும். பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராஜஸ்தானில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. மக்களவைத் தேர்தலில் சிகார் தொகுதி யில் போட்டியிட்ட அம்ரா ராம் வெற்றி பெற்றது, கட்சி தொண்டர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலித் - சிறுபான்மை வாக்காளர்க ளால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவளித்ததன் மூலம், இந்த வெற்றி சாத்தியமானது. புதிய தரப்பை கட்சி யின் பால் ஈர்க்கவும் அவர்களைத் தக்க வைக்கவும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. மாநி லத்தில் விவசாயிகள் சங்க நடவ டிக்கைகள்  கூர்மைப்படுத்தப்படும். ஏற்கெனவே, சிகார், சுரு, கங்கா நகர், பிகானேர் போன்ற பல மாவட்டங்க ளில், குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிர்க் காப்பீடு, அதிகரித்து வரும் விவ சாயச் செலவுகள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்சனைக ளுக்காக அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலுவான போராட்டங்களை நடத்தியுள்ளது. மாநிலத்தில் இந்திய மாணவர் சங்கம் துடிப்புடன் செயல்பட்டு வருகிறது. பல கல்லூரிகளில் மாணவர் சங்கம் வெற்றி பெற்றுள்ளதால், மாணவர் தேர்தல்கள் நடத்துவதையே பாஜக தவிர்க்கப் பார்க்கிறது” என்றார்.