tamilnadu

img

பந்தியில் இடமில்லை பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்க வேண்டாம்

அதிமுகவிற்கு பாரமாகத்தான் பாஜக உள்ளது. எங்கள் தலைவர்கள்தான் பாஜகவி டம் சரணடைந்து இருக்கிறார்கள். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், பாஜக விற்கு பந்தியில் இடமில்லை என தெளிவாக சொல்விட்டோம். எங்கள் தலைவர்கள்தான் பக்க த்து இலைக்கு பாயாசம் கேட்டுக்கொண்டிருக்கி றார்கள் என அதிமுக தொண்டர்கள் கொதிப்பது ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்தில் அப்பட்ட மாக தெரிகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக, திருமகன் ஈவேராவின் தந்தை இவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடு கிறார். அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடு கிறார். இதர கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பா ளர்களும் போட்டியிடுகின்றனர்.  இந்த தொகுதி ஏற்கனவே திமுக கூட்டணி, காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால், திமுகவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப் பட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதுபோக, திமுகவின் பெரும்பாலான அமைச்சர்கள் தொகு தியில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பை தீவிரப்ப டுத்தி வருகின்றனர். மேலும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அனைத்து தலைவர்களும் ஈரோடு கிழக்கில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இவிகேஎஸ்.இளங்கோவனின் வெற்றிக்கு பம்பரமாய் சுற்றி வருகிறார்கள்.  

இந்நிலையில், அதிமுகவின் பாடுதான் பெரும் பாடாக இருக்கிறது. பிரச்சாரத்தில், குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் நட்சத்திர பேச்சாளர்களோ, மக்களை கவரும் தலைவர்களோ இல்லை. தொகுதிக்குள் வலம் வரும், வேலுமணி, தங்க மணி போன்றோர் முகாமிட்டு பிரச்சராம் செய்தா லும், மக்கள் பார்வையில் ஊழல் மணிகளா கவே தெரிவதால், இவர்களின் பிரச்சாரமும் எடு படவில்லை. பல இடங்களில் வாக்கு சேகரிக்க ஊருக்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்த சம்ப வங்களும் நடைபெற்று வருகின்றது. இந்நிலை யில், இல்லாத கௌரவத்தை காக்க எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கி, என்ன பேசுவதென்றே தெரியாமல், மீசை வச்ச ஆம்பிளைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி பார்த்தார். அது வெறும் மயிர் என ஆதவன் தீட் சன்யாவின் கவிதை வைரலாக அதிமுகவினர் அப்செட் ஆனார்கள்.  அதிமுகவின் இந்த சோக கதை இப்படியே போக, மறுபுறம் வேண்டாத (பாஜக) சுமையை தூக்கி சுமக்க முடியாது எனவும், பந்தியிலே இடம் தரமாட்டோம், தலைவர்கள் பக்கத்து (பாஜக) இலைக்கு பயாசம் கேட்க வேண்டாம் என்பதை வெளிப்படுத்தி உள்ளனர். இதன்ஒருபகுதியாக ஈரோடு பெருந்துறை சாலை ரவுண்டானா அரு கில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக தேர்தல் பணி மனையில் அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின்  கொடிகளும் கட்டப்பட்டுள் ளது. அந்தோ பரிதாபம், நாங்கள்தான் தமிழ கத்தின் பிரதான எதிர்கட்சி என வாய்ச்சவடால் விட்ட அண்ணாமலையின் பாஜக வின் ஒரு கொடி கூட  அதிமுக தேர்தல் பணிமனையில் கட்டப்பட வில்லை.  இது குறித்து தேர்தல் பணிமனையில் இருந்த  அதிமுக நிர்வாகிகளிடம் பேசுகையில், ஈரோடு இடைத்தேர்தலை பொருத்தவரை, கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட மொடக்குறிச்சி தொகுதி யில், அதிமுகவின் வாக்குகளே பாரதிய ஜனதா கட்சி சி.கே சரஸ்வதியை வெற்றி பெற வைத்தது.

கோவை தெற்கிலும் வானதியின் வெற்றியும் அதிமுகவின் செல்வாக்குதான் காரணம். பாஜக கட்சியினருக்கு பெரிதாக ஆதரவு தளம் ஏதும் கிடையாது. எங்களுக்கே ஒரு வித அதிருப்தி உள்ளது.  நிலைமை இப்படி இருக்க பாஜக கொடியை பயன்படுத்தும் பட்சத்தில் அது எங்களுக்கு எதிராகவே அமையும் என அச்சப்படு கிறோம். ஆகவே, தேர்தல் பணிமனையில் கூட பாரதிய ஜனதா கட்சியின் கொடி கட்டப்பட வில்லை. இதை பாஜகவினரிடம் மறைமுக மாகவே தெரிவித்து விட்டோம். அவர்களும், இதை  கண்டும் காணாத போல் உள்ளனர். அதே போல, பாஜகவினரை  ஓட்டு கேட்க அழைத்துச் செல்வது இல்லை. வாய்மொழியாக எங்களுக்கு மேல் உள்ள தலைவர்கள் மறைமுகமாக தெரி வித்து விட்டனர் என்றனர். தமிழ்நாடு சுயமரி யாதை மண் என்பதும், அதற்கு பாதை அமைத்த தில் ஈரோடு முக்கிய பங்காற்றியது என்பது, அண்ணாமலைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப் பில்லை. அதிமுக தொண்டர்கள் உணர்ந்துள்ள தாகவே தெரிகிறது. -பிரபாகரன்