tamilnadu

நாகர்கோவிலில் பாஜக விதிமீறல் : அதிகாரிகள் பாராமுகம்

நாகர்கோவில், பிப். 9- நாகர்கோவில் மாநகராட்சி 50வது வார்டில் பாஜக சார்பில் ஐயப்பன் போட்டியிடுகிறார். இவர் வாக்கு சேகரிக்க செல்லும்போது வீடு வீடாக துண்டுப் பிரசுரம் கொடுக்கிறாரோ இல்லையோ துண்டு கொடுத்து வாக்காளர்களை கவர முயற்சிக்கிறார். அதோடு பெரும் கும்பலாக தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வைரவிளை பகுதி யில் இவ்வாறு துண்டு கொடுத்து கும்பலாக வாக்கு சேகரிப்பது குறிதது தேர்தல் பறக்கும் படையினருக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ். கண்ணன். மேலும் அவர் கூறுகையில், 50 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் கிருஷ்ணபிரசாத் வாக்கு சேகரிக்க செல்லும்போது கெடுபிடி செய்யும் அதிகாரிகள் பாஜகவின் அத்துமீறல் களை கண்டுகொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.