தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றியுள்ளது
முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றி உள்ளது என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார். தனது எக்ஸ் தள பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: பெங்களூருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல; மக்களின் தீர்ப்பைத் திருடுவதற்கான திட்ட மிட்ட சதி. ராகுல் காந்தி கொடுத்துள்ள வாக்குத் திருட்டு சான்று கள் இந்த மோசடியை அம்பலப்படுத்துகின்றன. திங்களன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணி நடத்தினர். இந்தப் போராட்டத்தில் திமுக தோளோடு தோள் நிற்கிறது. கணினியால் படித்தறியக் கூடிய வடிவத்தில் அனைத்து மாநிலங்களின் வாக்காளர் பட்டியல் கோப்பும் உடனடியாக அளிக்கப்பட வேண்டும். அரசியல் ரீதியான நீக்குதல் களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வாக்குத் திருட்டு முறைகேடு குறித்து, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளார். மேலும், “இந்தியாவின் ஜனநாயகத்தை பட்டப்பகலில் பாஜக கொள்ளையடிப்பதை பார்த்துக்கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.