சென்னை,ஜூலை 23- பாஜக சமூக விரோதிகளின் கூடார மாக மாறியுள்ளதாக இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு திமுக சார்பில் அயனா வரத்தில் 160 திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் பரத நாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜன் ஆகியோர் வழங்கினர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், காவல்துறை இந்தாண்டு மட்டும் சமூக விரோதிகள் மீது எடுத்துள்ள நட வடிக்கைகளின் பட்டியலை பார்த்தால் பாஜகவினரே அதிகமாக இருப்பார் கள். பாஜக சமூக விரோதிகளின் கூடார மாக உள்ளது. தினமும் அவதூறு களை பரப்பி, சட்டம் ஒழுங்கை சீர் குலைப்பது , மதவாதத்தைத் தூண்டு வது போன்ற செயல்களில் ஈடு பட்டுள்ளனர். இதனைத் தடுக்க கைது நடவடிக்கை, குற்ற நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.
திமுகவினர் மீதும் கூட கைது நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணா மலை மேற்கொள்ளும் நடைபயணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, “நூறு அண்ணா மலை வந்தாலும் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதி களிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். நடைபயணத்தில் வைக்கப்படும் புகார் பெட்டியில் பாஜக சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி யுள்ளதால், பாஜகவினர் ஒவ்வொரு மாவட்டங்களில் செய்து வரும் கட்டப் பஞ்சாயத்து, ரவுடிதனத்தை மக்கள் புகார் பெட்டியில் தெரிவிப்பார்கள்” என்று கூறினார். சென்னையில் மழைநீர் வடிகால் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், “பருவ மழைக்கு தேவை யான முன்னெச்சரிக்கை நடவடிக் ்கைகள் எடுக்கப்படுகின்றன. மீத முள்ள 85 கிலோ மீட்டருக்கான மழை நீர் வடிகால் பணிகள் ரூ 248 கோடி மதிப்பீட்டில் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். மக்க ளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணி கள் முடிக்கப்படாத இடங்களில் பாது காப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள் ளது. கடந்தாண்டுகளில் மழைநீர் தேங்கிய இடங்களை விட இந்தாண்டு 60 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இத னால் பருவமழையை எதிர்கொள்ள தமி ழக அரசும், சென்னை மாநகராட்சியும் தயாராக உள்ளது” என்றார்.