tamilnadu

img

சேவாலயத்திற்கு ஆதரவாக திரண்ட பாஜக, இந்து முன்னணியினர்

3 சிறுவர்கள் உயிரிழந்து, 12 பேர் சிகிச்சை பெற்று  வரும் தகவல் பரவிய நிலையில்  விவேகானந்த சேவாலயம் முன்பாக பொது மக்கள் பெரு மளவு திரண்டனர். அதேசமயம் செய்தியாளர்கள் விவேகானந்த சேவாலயத்திற்குள் சென்று நடந்த விபரத்தை அறிய முற்பட்ட னர். ஆனால் முன்னதாக அந்த  இடத்தை காவல் துறையினர் கட்  டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நிலையில், செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதையடுத்து உள்ளே அனு மதிக்கக் கோரி, செய்தியாளர் கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். சம்பவ இடத்தில் இருந்து  உதவி ஆணையர் நல்லசிவம், காவல் ஆணையர் அனுமதி  பெற்று உள்ளே அனுமதிப்பதாக வும், அதுவரை ஒத்துழைப்பு வழங்கும்படியும் கேட்டுக் கொண்ட நிலையில் மறியல் முயற்சியை செய்தியாளர்கள் கைவிட்டனர். எனினும் கடைசிவரை செய்தி யாளர்களை உள்ளே அனும திக்கவில்லை. அதேசமயம் சேவாலயத் திற்குள் இந்து முன்னணி, பாஜக வைச் சேர்ந்தவர்கள் உள்ளே சென்று வந்தனர். பாஜக, இந்து  முன்னணியைச் சேர்ந்த ஐம்ப துக்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் சேவாலயத்திற்கு ஆத ரவாக நின்று கொண்டு மற்ற வர்களை விரட்டிக் கொண்டிருந் தனர். எனினும் காவல்துறை யினர் அவர்களைக் கண்டு கொள்ள  வில்லை.