பெண்ணை மையப்படுத்தி இந்தியா கூட்டணி யை இழிவுபடுத்தி பாஜக விளம்பரம் வெளி யிட்டுள்ளது. இதனை வன்மையாக கண் டிக்கிறோம். ஒரு பெண்ணை, பெண் பார்க்க போகிற படலத் தில், நான் தான் மாப்பிள்ளை என்று இந்தியா கூட்டணியினர் சொல்வதாக சித்தரிக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டுள் ளது. யாரைத் தேர்வு செய்வது; இப்படி சண்டை போட்டுக் கொள்கிறார்களே என்று அந்த மணப்பெண் திகைத்துப் போவதுபோல அந்த விளம்பரத்தை பாஜக வடிவ மைத்து உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணை யம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை இழிவுபடுத்தியதால் உச்சநீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே விளம்பரத்தை நாங்கள் திருப்பி போடு கிறோம். பிரதமர் மோடி தனது சொந்த வாழ்க்கையில் யசோதா என்ற பெண்ணை திருமணம் செய் தார். அவருடன் சேர்ந்து வாழ்கிறாரா? யசோதா அவ ரால் கைவிடப்பட்ட பெண்ணாக வாழ்ந்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் இந்திய நாட்டில் 33 விழுக் காடு பெண்களுக்கான மசோதா சட்டமாக்கப்பட்டுள் ளது. அந்த மசோதா எந்த ஆண்டு அமலுக்கு வரும் என்று கூட தெரியாது. பெண்களுக்கான வன்முறை கள் பாஜக ஆட்சியில நாடு முழுவதும் அறங்கேற்றப் பட்டுள்ளது. தனது மனைவியை கைவிட்ட மோடி எப்படி மாப்பிள்ளையாகவும், வேட்பாளராகவும் மாறுவார்? கே.பாலபாரதி, சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்