tamilnadu

img

பாஜக - அதிமுகவின் கள்ளத்தனம்: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

சென்னை,  பிப். 16 - அதிமுக அணியிலிருந்து பாஜக வெளியேறியதற்கான காரணத்தை இரண்டு கட்சிகளும் சொல்லாமல் இருப்பது கள்ளத்தனம் என காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் 173ஆவது வட்டத்தில்  போட்டியிடும் வேட்பாளர் து.சுபாஷி னியை ஆதரித்து புதனன்று (பிப்.16) இந்திரா நகர் பகுதியில் கே.எஸ்.அழகிரி வாக்கு சேகரித்தார். அப்போது  செய்தியாளர்களிடம் அவர் கூறியதா வது: அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக பிரிந்ததற்கான காரணத்தை இரு கட்சிகளுமே தெரிவிக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இல்லை என்றால், நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக தனித்து நிற்குமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டிய தார்மீக கடமை அதிமுக, பாஜகவிற்கு உள்ளது. ஒரு கட்சி கூட்டணியில் சேரும்போ தும், விலகும்போது அதற்கான காரணத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

கூட்டணியிலிருந்து பிரிந்த தற்கான காரணத்தை இரண்டு கட்சிக ளும் கூறாமல் இருப்பது கள்ளத்தன மானது; வாக்காளர்களை ஏமாற்றும் செயல். கூட்டணியிலிருந்து வெளி யேறியதற்கான காரணத்தை சொல்லும் நெஞ்சுரம், அரசியல் நேர்மை  அந்த கட்சிகளுக்கு கிடையாது. ஆகவே, அந்தக் கட்சிகளை மக்கள் ஏற்கமாட்டார்கள். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 100 விழுக்காடு வெற்றி பெறும். இந்தியாவில் ஒரேநாடு, ஒரே தேர்தல் என்பதெல்லாம் சாத்தியமில்லை. பாஜக 13 மாநிலங்களில்தான் ஆட்சி செய்கிறது. இந்தியா ஒரு தேசம்; நாடு அல்ல. தமிழ்நாடு ஒரு நாடு, குஜராத் ஒரு நாடு. இப்ப பல நாடுகளின் கூட்டுதான் இந்திய தேசம். பாஜகவிற்கு நாடு, தேசம் என்பதற்கு வித்தியாசம் தெரியாமல் குழம்புகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைத்துவிட்டு தேர்தலை நடத்து வோம் என்கிறார்கள். பேசுவதற்கு ஏதும் இல்லை என்பதால் இதுபோன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.