கடலூர், ஜூலை 29- இந்தியாவிலேயே பெருத்த ஊழல்வாதிகளாக இருக்கக்கூடிய பாஜகவினர் தமிழ்நாட்டில் புனிதர் வேஷம் போடுவது மக்களிடம் எடு படாது என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் கூறினார். சனிக்கிழமை (ஜூலை 29) கடலூரில் செய்தியாளர்களி டம் அவர் பேசியதாவது: பாஜக தலைவர் அண்ணா மலையின் பாதயாத்திரை யை தொடக்கி வைத்து ராமேஸ் வரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். நாட் டில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. மணிப்பூர் பிரச்சனை இன்னும் ஓய்ந்தபாடில்லை. நாடாளுமன்றம் நடக்காமல் முடங்கி கிடக்கிறது. இதற்குக் காரணம் பாஜக தான். அனைத்து எதிர்க்கட்சி களும் ஒரு முழுமையான விவாதத்தை நடத்த கேட் கின்றனர். குறிப்பாக பிரதமர் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இவ்வளவு பிரச்சனை இருக்கையில் ஒரு பாதயாத்திரையை அமித்ஷா தொடங்கி வைத்திருப்பது நாட்டின் நலனை விட அவர் கட்சியின் நலனே முக்கியம் என்று கருதுகிறார். பாதயாத்திரை துவக்க விழா கூட்டத் தில் அமித்ஷா தமிழையும், இலக்கியங்களை யும் திருக்குறளையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார். பாஜக அரசு மற்ற மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கிய நிதியை விட சமஸ்கிருதத்திற்கு 22 மடங்கு நிதியை அதிகமாக ஒதுக்கி உள்ளது. எனவே தமிழ் மொழிமீது அக்கறை உள்ளது போன்று இவர் கள் பேசுவதை பார்த்து தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். பாஜக அரசு தமிழகத்தில் இந்தியை யும் சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற் சிக்கிறது. தமிழகத்தில் மட்டும் தமிழ், தமிழ் என்று பேசும் பாஜகவினர் தமிழை தேசிய அலுவலக மொழியாக அறிவிக்க தயாரா?
ஊழல்வாதிகளின் புனிதர் வேடம்
மோடி குஜராத் முதலமைச்சராக இருந் ததிலிருந்து தற்போது 9 ஆண்டுகளாக மத்தி யில் ஆட்சி செய்யும் வரை பக்கம் பக்கமாக ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிட முடி யும். நாட்டையே ஊழலால் சுருட்டி வைத்து இருக்கிற பாஜக தமிழகத்தில் ஊழல் பற்றி பேச தார்மீக உரிமை இல்லை. இந்தியாவி லேயே பெருத்த ஊழல்வாதிகளாக இருக் கக்கூடிய பாஜகவினர், தமிழ்நாட்டில் வந்து புனிதர் வேஷம் போடுவது என்பது எடு படாது. பேட்டியின் போது மாவட்டச் செயலா ளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்புராயன், ஜெ. ராஜேஷ் கண்ணன், மாநகர செயலாளர் ஆர். அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கிரான் ஆகியோர் உடனிருந்தனர்.
என்எல்சி நிறுவனத்தை இழுத்து மூட வேண்டுமா?
கடலூர் மாவட்டம் நெய்வேலி நிறுவனத்தின் நிலம் எடுக்கும் பிரச்சனையில், பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தி, அதில் கல்வீச்சு சம்ப வங்கள், கண்ணீர்ப் புகை வீச்சு, தடியடி போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி யாக இருக்கிறது. நெய்வேலி என்எல்சி நிறுவனம் தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பொழுது, ஏற்கனவே இந்திய அரசால் நிறைவேற்றப்பட்டி ருக்கிற, மறுவாழ்வு மறு குடியமர்வு சட் டத்திற்கு உட்பட்டு நிலத்தை கையகப் படுத்த வேண்டும். கடந்த 50 ஆண்டு களுக்கு மேலாக நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலங்களை கையகப்படுத் தும் போது விவசாயிகளிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. நிலம் எடுத்து 50 ஆண்டுகளுக்கு மேலாக விஜய மாநகரத்தில் தங்க வைக் கப்பட்டு இருப்பவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. வரு டத்திற்கு ரூ.1500 கோடி லாபம் ஈட்டும் நிறு வனம் 200 கோடி ரூபாயை விவசாயி களின் குடியமர்விற்கு தாராளமாக செலவு செய்யலாம். முறையான பேச்சு வார்த்தை நடத்தி விவசாயிகளின் கோரிக்கையை சட்டத்திற்கு உட்பட்டு நிறைவேற்ற வேண்டும். இந்த விஷ யத்தில் பாட்டாளி மக்கள் கட்சி என்எல்சி நிறுவனத்தை முழுவதுமாக இழுத்து மூட வேண்டும், நெய்வேலியை விட்டு என்எல்சி நிறுவனம் வெளியேற வேண் டும் என்பது ஏற்கத்தக்கதல்ல. அது பல்வேறு விதமான சமூக நெருக்கடி களையும், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒரு தடைக்கல்லாகவும் அமையும்.
நீதிமன்ற தீர்ப்பிற்கு வரவேற்பு
ஆகம விதிகளின்படி பயிற்சி பெற்றவர்கள் யாராக இருந்தாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உயர் நீதி மன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். அதே போல கணவனின் சொத்தில் பெண் களுக்கும் பங்கு உண்டு என்ற தீர்ப்பை யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.