tamilnadu

img

‘உ.பி., கேரளாவாக மாறினால் மக்களின் வாழ்க்கை சிறக்கும்’

திருவனந்தபுரம், பிப்.10- கேரளாவை இழிவுபடுத்திய உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, முதல்வர் பினராயி விஜயன் பதிலளித் துள்ளார். யோகி அச்சத்தில் இருப்ப தாகவும், உ.பி., கேரளாவாக மாறி னால், சிறந்த கல்வி, சுகாதார சேவை, சமூக நலன் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மக்கள் அனுபவிப்பர் என்றும் பினராயி விஜயன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். உ.பி.யில் மக்கள் அனுபவித்து வரும் கடுமையான துன்புறுத்தலை பினராயி விஜயனின் டுவிட் சுட்டிக் காட்டியுள்ளது. மதம் மற்றும் சாதியின் பெயரால் மக்கள் கொல்லப்படாத ஒன்றுபட்ட சமுதாயமாக மக்கள் மாறு வார்கள் என்றும், அதையே உ.பி. மக்கள் விரும்புவதாகவும் முதல்வர் கூறியுள்ளார். முன்னதாக யோகி ஆதித்யநாத் வாக்குகளை பெறும் நோக்கில் கேரளா வுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். உ.பி.யின் வாக்கா ளர்கள் தவறு செய்தால் உத்தரப்பிர தேசம் காஷ்மீர் அல்லது கேரளா அல்லது மேற்கு வங்கமாக மாறும் என்று யோகி கூறினார். உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பின்னடைவைச் சந்திக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி வரும்  நிலையில் யோகியின் இந்த அவ தூறுக் கருத்து வெளியாகியுள்ளது. இந்நிலையில் உ.பி., கேரளா போல்  மாறினால், பா.ஜ.க வின் தோல்வி நிச்ச யம் என மார்க்சிஸ்ட் கட்சியின் சீத்தா ராம் யெச்சூரி பதிலளித்திருந்தார்.