பாரதி பாரத தேசத்தின் சாரதி
ஆசிரியர்: கார்த்திகேயன்,
பதிப்பகம்: இராகுல்ஜி அறக்கட்டளை, எண்: 233,
வாசுகிநகர் மூன்றாவது தெரு, வள்ளுவர் காலனி, தபால்தந்திநகர் மதுரை-600077.
அலைபேசி: 94433833332.
விலை: 125
பாரதி என்ற மூன்றெழுத்து வார்த்தை ஒரு மந்தி ரச்சொல் என்றே சொல்லலாம். அந்த பெயரை உச்சரித்தாலே உற்சாகம் தானாக உள்ளத்தில் வந்து புகுந்து விடும். கவிதை என்பது கற்றவர் சபை களில் கவிஞர்கள் தன் மேதாவிலா சத்தை காட்டுவதற்காக பாடுவது என்ற மரபை மாற்றி சாதாரண மக்களுக்கு புரி யும்மொழியில் எளிய சொற்கள் ஜனங் கள் விரும்பும் மெட்டு ஆகிய அம்சங்க ளோடு கவிதை இருக்க வேண்டும் என்ற மரபின் வாசலை திறந்து வைத்தவர் பாரதி. தெய்வத்தை மனிதனாக்கியவன் கம்பன். மனிதனை தெய்வமாக்கியவன் வள்ளுவன். ஆனால், மனிதனை மனி தன் ஆக்கியவன் பாரதி. பாரதியைப் பற்றி எழுதாத எழுத்தா ளர்களே இல்லை. அதற்கேற்ப தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திருவள்ளுவர் மாவட்ட திருநின்றவூர் கிளை உறுப்பினர் எழுத்தா ளர் கார்த்திகேயன் பாரதி பாரத தேசத்தின் சாரதி என்ற நூலை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான ஜானகிகாந்தனால் எழுதப்பட்டு அவரது மகன் கார்த்திகே யனால் தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதல் மாநில மாநாட்டிலும் மற்றும் சென்னையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பல மேடைகளி லும் நிகழ்த்தப்பட்ட மகாகவி பாரதியார் பற்றிய வாழ்க்கை வரலாறு வில்லுப் பாட்டு, புத்தகத்தின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.
பாரதி மணிமண்டப திறப்பு விழா வினை நடத்திய மூதறிஞர் ராஜாஜி, கல்கி ஆகியோர் காலம் முழுவதும் பாரதியை தோளில் சுமந்து சென்ற தோழர் ஜீவா வை அந்த விழாவிற்கு அழைக்க வில்லை. ஆனால், ஜீவா விழாவிற்கு செல்லும் பாரதி ஆர்வலர்களில் ஒரு வராக கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்திற்கு வந்த பாரதி ஆர்வலர் கள் ஒரே குரலில் ஜீவாவை மேடையில் ஏற்றி பேசச் சொல்லி குரல் கொடுத்தனர். அதனைத் தவிர்க்க முடியாத கல்கியும் ஐந்து நிமிட நேரம் உரையாற்ற அவ காசம் அளித்தார். மேடையில் ஏறிய ஜீவா ஒருமணி நேரம் பாரதியை பற்றி பேசினார் அதிலும் பாரதி ஒரு பொது வுடமை கவிஞர் என்பதை தன் பேச்சின் மூலம் நிறுவினார். அதைக்கேட்ட பாரதி ஆர்வலர்களின் கைதட்டல் சத்தம் அடங்கவே 5 நிமிட நேரமானது என்ற சுவையான ஆனால் உண்மையான சம்பவத்தை அழகாக விளக்கியுள்ளார். நூலுக்கு பாரதி திரைப்படத்தின் இயக்குனர் ஞானராஜசேகரன் சிறப்பான வாழ்த்துரையை வழங்கி உள்ளார். இப்புத்தகத்தை வாங்கி படிப்ப தும் பரவலாக்குவதும் தமிழ் சமூகத்தின் கடமையாகும் அதன்மூலம் பாரதியின் வில்லுப்பாட்டும் எல்லோரையும் குறிப் பாக இளைய மாணவர் சமுதாயத்தின ரிடம் சென்று அடையும்.