tamilnadu

img

விடுதிக்குள் நள்ளிரவில் மர்மநபர்கள் புகுந்து ரகளை பாரதியார் பல்கலைக்கழக மாணவிகள் போராட்டம்

கோவை, மார்ச் 31- பாரதியார் பல்கலைக்கழக மாணவி களின் விடுதிக்குள் நள்ளிரவில் அடை யாளம் தெரியாத நபர்கள் புகுந்து அறை கதவை தட்டுவதாக புகார் தெரிவித் தும், மாணவிகளின் விடுதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீர் போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட் டது. கோவை மருதமலை அருகே அமைந்துள்ள பாரதியார் பல்கலைக் கழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்ற னர். இந்த பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்ற னர்.

இந்நிலையில், கடந்த மூன்று  வாரங்களுக்கு மேலாக அடையாளம் தெரியாத நபர்கள், இரவு நேரங்களில் விடுதிகளுக்குள்  நுழைவதாகவும், இரவு 11 மணி முதல் அதிகாலை 3  மணி வரை விடுதி வளாகத்தில் உலா  வருவதாகவும், மாணவிகள் தங்கி இருக்கும் அறை கதவை தட்டி அச் சத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படு கிறது.  மேலும், விடுதியில் வைக்கப்பட் டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் செய லிழந்துள்ளதோடு, விடுதி காப்பாளர் கள் ரோந்து பணியை முறையாக  மேற் கொள்வதில்லை. இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி கோவை பாரதியார் பல்கலைக் கழக வாயில் முன்பு 500க்கும் மேற்பட்ட மாணவிகள் அமர்ந்து திடீர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.  

பல்கலைக் கழகத்தின் வாயிலில் திரண்ட மாணவிகள், பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதோடு, சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவ லறிந்து வந்த காவல் துறையினர் அவர் களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை  மேற்கொண்டனர். இதனைத்தொ டர்ந்து பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பி.காளிராஜ் போராட்டத்தில் ஈடு பட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மாண விகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.