மயிலாடுதுறை, அக்.9 - கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி யில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மயிலாடுதுறை அருகே பல்லவ ராயன்பேட்டை கிராமத்தில் சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிட பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாய மாணவர்கள் பயில்கின்றனர். கோவா மாநிலத்தில் யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் அசோசி யேசன் ஆப் இந்தியா சார்பில் அக்.3 முதல் 5 வரை, நேசனல் பெடரேஷன் கப் 2023-க்கான தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற் றது. இதில், இந்த உண்டு உறைவிடப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் சாமுவேல் என்ற நரிக்குறவ சமூகத் தைச் சேர்ந்த மாணவர் தமிழ்நாட்டிற் காக கலந்து கொண்டு விளையாடினார். இறுதிப் போட்டியில் தெலுங்கானா மாநிலத்துடன் விளையாடி, அதில் வென்று தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் தங்கப்பதக் கம் வென்று ரயில் மூலம் சொந்த ஊர் திரும்பிய மாணவனுக்கு, மயிலாடு துறை ரயில் நிலையத்தில் நரிக்குறவர் சமூகத்தினர் உற்சாக வரவேற்பளித்த னர். பள்ளி நிர்வாகி விஜயசுந்தரம் தலை மையில் ரயில் நிலையம் வந்த அச்சமூ கத்தைச் சேர்ந்த மக்கள், வெற்றி பெற்ற மாணவன், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஆசைத்தம்பி ஆகியோருக்கு சால்வை அணி வித்தும், மாணவனுக்கு பாசி, ஊசி மணி மாலை அணிவித்தும் வாழ்த்தி னர். மேலும் பல்வேறு போட்டிகளில் விளையாடி தங்கப்பதக்கம் வென்று வரும் மாணவர் சாமுவேல்-க்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பள்ளியில் பயிலும் மாண வர்கள் பலர், இதுபோன்ற குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்று சாத னை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.