சென்னை, நவ.4- திருச்சி அருகேயுள்ள படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன். திருச்சி தந்தை பெரியார் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை தலைவராகவும் பணிபுரிந்தவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரி யார் உயராய்வு மையத் தலைவராகவும் பணியாற்றிய பேராசிரியர் நெடுஞ் செழியன் 20-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். திருச்சியில் வசித்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டி ருந்தார். இந்நிலையில் வெள்ளியன்று (நவ.4) சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார். மருத்துவமனையில் வைக்கப்பட்டி ருந்த அவரது உடலுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். பிறகு, அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. பேராசிரியர் க.நெடுஞ்செழியன் மறை வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“தமிழ்மொழி அறிஞர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் மறைவை அறிந்து மிகமிக வருத்த மடைகிறேன். கடந்த மாதம்தான் அவருக்குக் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை’ வழங்கினேன். அவரை இழந்து வாடும் அவர் தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கி றேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.